தேர்தல்: சுயேச்சையாகப் போட்டியிடும் ‘கானா’ பாலா

கானா பாலா
கானா பாலா

பிரபல பாடகர் கானா பாலா, சென்னை மாநாகராட்சி தேர்தலில் 72-வது வார்டில் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார்.

பிரபல பின்னணி பாடகர் கானா பாலா என்ற பாலமுருகன். கானா பாடல்கள் மூலம் பிரலமான இவர், பல சூப்பர் ஹிட் பாடல்களை;ப பாடியுள்ளார். சென்னை, புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியைச் சேர்ந்த இவர், சென்னை மாநகராட்சி தேர்தலில், திரு.வி.க.நகர் 6-வது மண்டலம், 72-வது வார்டில் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார்.

இதற்காக அவர் நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். ஏற்கெனவே, அந்த வார்டில் 2006, 2011-ம் ஆண்டுகளில் போட்டியிட்டு 2-வது இடம் பிடித்தார். இப்போது 3-வது முறையாக அதே வார்டில் போட்டியிட மனுத்தாக்கல் செய்துள்ளார்.

கானா பாலா
கானா பாலா

இதுகுறித்து அவர் கூறும்போது, “இது நான் பிறந்து வளர்ந்த பகுதி. இந்தப் பகுதி மக்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும் என்பதற்காகப் போட்டியிடுகிறேன். ஏற்கெனவே இந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு நன்கு அறிமுகமானவன் என்பதால், இந்தமுறை கண்டிப்பாக வெற்றி பெறுவேன்” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in