சென்னை உயர்நீதிமன்றத்தை படம்பிடித்த ட்ரோன்: பிச்சைக்காரன்-2 படக்குழுவினர் 3 பேர் கைது

சென்னை உயர்நீதிமன்றத்தை படம்பிடித்த ட்ரோன்: பிச்சைக்காரன்-2 படக்குழுவினர் 3 பேர் கைது

அனுமதியின்றி சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் பார் கவுன்சில் வளாகத்தை ட்ரோன் மூலம் படம் பிடித்ததாக பிச்சைக்காரன்-2 படக்குழுவை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் 2016-ம் ஆண்டு வெளியான படம் பிச்சைக்காரன். இந்தப் படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இதையடுத்து, அதன் இரண்டாம் பாகம் விரைவில் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.

அதன்படி, பிச்சைக்காரன்2 படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், எடிட்டிங், இசை போன்ற அனைத்தும் விஜய் ஆண்டனி செய்துள்ள நிலையில், படத்தின் நாயகனாக நடித்துள்ளார். இறுதிக்கட்ட படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு முடிந்த நிலையில், அண்மையில் அனுமதியின்றி சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் பார் கவுன்சில் வளாகத்தை ட்ரோன் மூலம் படக்குழுவினர் படம் பிடித்துள்ளனர். இதனிடையே, அனுமதியின்றி படம் பிடித்ததாக படக்குழுவை சேர்ந்த நவீன் குமார், சுபேஸ், சுரேஷ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். இதன் பின்னர்கள் அவர்கள் 3 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in