சபரிமலையில் இயக்குநர் விக்னேஷ் சிவன்!

பிப்ரவரியில் நயன்தாராவுடன் திருமணம்?
விக்னேஷ் சிவன்
விக்னேஷ் சிவன்

இயக்குநர் விக்னேஷ் சிவன் மகரஜோதி தரிசனத்துக்காக சபரிமலை சென்றுள்ளார்.

இயக்குநர் விக்னேஷ் சிவன், இப்போது ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இதில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சம்ந்தா ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ளார். இந்தப் படம் பிப்ரவரி மாதம் வெளியாக இருக்கிறது. பிப்ரவரி மாதம் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன.

இதற்கிடையே, புத்தாண்டை கொண்டாட, நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் துபாய் சென்றிருந்தனர். அங்குள்ள புர்ஜ் கலிபாவில் இருவரும் எடுத்துக்கொண்ட புத்தாண்டு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாயின.

சபரிமலையில் இயக்குநர் விக்னேஷ் சிவன்
சபரிமலையில் இயக்குநர் விக்னேஷ் சிவன்

இந்நிலையில், விக்னேஷ் சிவன் இப்போது சபரிமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். ஐயப்பன் கோயிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ள விக்னேஷ் சிவன், மகர ஜோதி தரிசனத்துக்காக அங்கு சென்றுள்ளார். இவர் சபரிமலையில் சாமி தரிசனம் செய்தபோது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in