இயக்குநர் ஷங்கரின் மருமகன் அவரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர் என்ற செய்தி வெளியான நிலையில், அது உண்மையில்லை என்று அவர் மறுத்திருக்கிறார்.
இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு நேற்று முன்தினம் தருண் கார்த்திக் என்பவருடன் திருமணம் நடந்தது. திரையுலகைச் சேர்ந்த பல முக்கிய பிரபலங்களும் இந்தத் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். மாப்பிளை தருண் கார்த்திக் ஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர் என்ற செய்தி ஆரம்பத்தில் இருந்தே வெளியாகி வந்தது. ஆனால், அதையெல்லாம் மறுத்திருக்கிறார் ஷங்கர்.
மகள் ஐஸ்வர்யா, மருமகன் தருண் கார்திக்குடன் நேற்று மாலை பத்திரிகையாளர்களை சந்தித்தார் ஷங்கர். அப்போது தன் மருமகன் குறித்து வெளிவந்த செய்திகளை தெளிவுப்படுத்தினார்.
அப்போது பேசிய ஷங்கர், “தருண் என்னுடைய உதவி இயக்குநர் எனப் பல செய்திகளைப் பார்த்தேன். அது உண்மை இல்லை. அவர் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர். அமெரிக்க சிட்டிசன். அங்கு அவருடைய குடும்பத்திற்கு சொந்தமாக ஐடி நிறுவனம் உள்ளது. அவரது தந்தையும் இயக்குநர் ஹரியும் நெருங்கிய நண்பர்கள்.
சினிமா மீதுள்ள ஆர்வத்தால் தருண் ஹரியிடம் தான் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தார். ஹரி இயக்கத்தில், விஷால் நடிப்பில் வெளிவர இருக்கும் ‘ரத்னம்’ படத்தில் அவர் உதவி இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார். இதை தெளிவுப்படுத்த விரும்பினேன். உங்கள் அனைவரின் ஆசியும் மணமக்களுக்கு வேண்டும்” எனக் கூறினார்.
இதையும் வாசிக்கலாமே...
இந்த 5 தொகுதிகளில் வெற்றி இழுபறி!
தமிழ்நாட்டின் மிகப்பெரிய சந்தைக்கு 2 நாட்கள் விடுமுறை... தேர்தலை முன்னிட்டு அறிவிப்பு!
புதுச்சேரியில் இன்று முதல் 144 தடை உத்தரவு... தேர்தல் ஆணையம் அதிரடி!
தாயைப் பிரிந்த ஏக்கம்... 25 நாட்களாக தவித்த குட்டியானை உயிரை இழந்தது!
நேரிலும், செல்போனிலும் வாலிபர் காதல் டார்ச்சர்.... மனமுடைந்த பள்ளி மாணவி தற்கொலை!