
'லியோ’ வெற்றி விழாவில் இயக்குநர் ரத்னகுமார் நடிகர் ரஜினிகாந்த்தை மறைமுகமாகத் தாக்கிப் பேசியது ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையாக அவர் அதிரடியான முடிவை எடுத்திருக்கிறார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் யின் ‘லியோ’ திரைப்படத்தின் வெற்றிவிழா நேற்று மாலை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே நடிகர் ரஜினியின் குட்டி கதைக்கு நடிகர் விஜய் மேடையில் பதிலடி கொடுத்தார். ‘அப்பாவின் நாற்காலிக்கு மகன் ஆசைப்படுவதில் என்ன தப்பு இருக்கு? பெரிதாக ஆசைப்படுங்கள்’ என்று சொன்னவர், இறுதியாக ‘ஒரு புரட்சித்தலைவர்தான், ஒரு உலக நாயகன்தான், ஒரு சூப்பர் ஸ்டார்தான், ஒரு தலதான்’ என இந்த ‘அடுத்த சூப்பர் ஸ்டார்’ சர்ச்சைக்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.
ஆனால், அதற்கு முன்பு பேசிய இயக்குநரும் ‘லியோ’ படத்தின் எழுத்தாளருமான ரத்னகுமார் சொன்ன விஷயம்தான் ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தனக்கு சினிமா ஆசை வரக் காரணமே விஜய்தான் எனக் கூறியவர் பின்பு, ‘விஜய் எல்லோரையும் சமமாக தான் நடத்துவார். எல்லாவற்றையும் தாண்டி எவ்வளவு உயர பறந்தாலும் பசித்தால் கீழே வந்து தான் ஆக வேண்டும்’ எனப் பேசினார். இது ரஜினியின் ‘காக்கா-கழுகு’ குட்டிக்கதையோடு ஒப்பிட்டு ’கழுகு எவ்வளவு உயர பறந்தாலும் பசித்தால் கீழே வரவேண்டும்’ என்ற அர்த்தத்தில் அவர் ரஜினியை சொல்கிறாரா என ரசிகர்கள் அவரை திட்டி தீர்த்து வருகின்றனர்.
இதனால், தான் சமூக வலைதளங்களில் இருந்து விலகுவதாக ரத்னகுமார் முடிவெடுத்திருக்கிறார். அடுத்தப் படங்களின் பணிகள்தான் இதற்குக் காரணம் என அவர் குறிப்பிட்டிருந்தாலும் ‘லியோ’ படத்தின் வெற்றி விழாவில் இவர் பேசியது சர்ச்சையானதால்தான் இப்படி முடிவெடுத்துள்ளார் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
பழம்பெரும் நடிகர் ஜூனியர் பாலையா திடீர் மரணம்!
குட்நியூஸ்: பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
காங்கிரஸில் இணைகிறாரா நடிகை விஜயசாந்தி!?
அதிர்ச்சி! தொடர் மழை... வெள்ளத்தால் நனைத்து வீணாகிப்போன ரூ.400 கோடி வங்கிப் பணம்!
ஆசைப்பட்டா என்ன தப்பு? ரஜினியின் குட்டிக்கதைக்கு பதிலடி கொடுத்த விஜய்!