பிரபல இயக்குநர் மாரடைப்பால் மரணம்: திரையுலகினர் இரங்கல்

பிரபல இயக்குநர் மாரடைப்பால் மரணம்: திரையுலகினர் இரங்கல்

பிரபல இயக்குநர் மாரடைப்பால் மரணமடைந்ததை அடுத்து திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிரபல மலையாள திரைப்பட இயக்குநர் கே.என்.சசிதரன். புனே திரைப்பட கல்லூரியில் சினிமா கற்றுவிட்டு, அக்கரே என்ற படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். 1984-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் பரத்கோபி, மாதவி, மம்மூட்டி, மோகன்லால் உட்பட பலர் நடித்தனர். அடுத்து ’கனாதாய பெண்குட்டி’ உட்பட சில படங்களை இயக்கியுள்ளார்.

கடைசியாக ’நாயனா’ என்ற படத்தை இயக்கி இருந்தார். கடந்த 2014-ம் ஆண்டு வெளியான இதில் மியா ஜார்ஜ், அனுபம் கெர் உட்பட பலர் நடித்திருந்தனர். 90-களில் காவ்யா மாதவன் நடிப்பில் இவர் இயக்கிய சோப்பு விளம்பரம் அப்போது புகழ்பெற்றது. தொடர்ந்து விளம்பரப் படங்களையும் இயக்கி வந்தார்.

கொச்சியில் உள்ள எடப்பள்ளியில் வசித்து வந்த சசிதரனுக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து நேற்று மரணமடைந்தார். அவருக்கு வயது 72. அவர் மறைவை அடுத்து மலையாள திரையுலகினர் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்தனர். மறைந்த சசிதரனுக்கு வீனா என்ற மனைவியும் ரித்து என்ற மகளும் முகில் என்ற மகனும் உள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in