
நடிகர் சிவகார்த்திகேயனுடன் ஏ.ஆர்.முருகதாஸ் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.
’தீனா’, ‘ரமணா’, ‘கஜினி’, ‘துப்பாக்கி’ ஆகியப் படங்கள் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ். ரஜினியுடன் அவர் இணைந்த ‘தர்பார்’ படம் தோல்வியைத் தழுவியது. அதன் பிறகு அவர் நடிகர் விஜய்யுடன் 65-வது படம் இணைவதை உறுதி செய்தார். ஆனால், அது கைவிடப்பட்டது. இவரது கதையான ‘ராங்கி’ சமீபத்தில் த்ரிஷா நடிப்பில் வெளியாகி கலவையான விமர்சனம் பெற்றது. இந்த நிலையில், அவர் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைய இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
’பிரின்ஸ்’ படத்திற்குப் பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ‘மாவீரன்’, ‘அயலான்’ ஆகிய படங்களைக் கைவசம் வைத்துள்ளார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பே இவர்கள் இருவரும் இணைந்து படம் செய்ய இருந்த நிலையில் தற்போது அது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்கிறனர் சினிமா வட்டாரத்தில். படத்தை மதுவின் லைட் ஹவுஸ் மூவி தயாரிக்க இருக்கிறது. இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கலாம்.