நடிகர் திலீப்
நடிகர் திலீப்

சாட்சிக்கு மிரட்டல்: நடிகர் திலீப் வழக்கறிஞருக்கு நோட்டீஸ்

சாட்சியை மிரட்டியதாகக் கூறப்பட்ட புகாரில், நடிகர் திலீப்பின் வழக்கறிஞருக்கு கேரள குற்றப்பிரிவு போலீஸார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

பிரபல மலையாள நடிகை, கடந்த 2017-ம் ஆண்டு கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் நடந்து 5 வருடங்கள் ஆகியும் விசாரணை முடிவடையவில்லை. வழக்கை இந்த மாதத்துக்குள் முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே பலாத்கார வழக்கை விசாரிக்கும் டிஎஸ்பி உட்பட போலீஸாரை கொல்ல, நடிகர் திலீப் சதித்திட்டம் தீட்டியதாக வழக்கு தொடரப்பட்டது. இதன் விசாரணை, நீதிமன்றத்தின் அனுமதியுடன் நடந்து வருகிறது. இந்த வழக்கில் நடிகர் திலீப், அவர் சகோதரர் அனூப் உட்பட 6 பேருக்கு கேரள உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.

நடிகர் திலீப்
நடிகர் திலீப்

இந்நிலையில், நடிகை கடத்தப்பட்ட வழக்கில் சாட்சியான ஜின்சன் என்பவருக்கு மிரட்டல் வந்ததாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புகாரில், விளக்கம் பெறுவதற்காக நடிகர் திலீப்பின் வழக்கறிஞர் ராமன் பிள்ளைக்கு குற்றப்பிரிவு இணை எஸ்.பி, அம்மனிகுட்டன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

ஆனால், இந்த நோட்டீஸ் சட்டப்படி செல்லாது என்றும் விசாரணை அதிகாரி விரும்பினால், தீர்மானிக்கப்பட்ட தேதியில் பேசத் தயாராக இருப்பதாகவும் ராமன் பிள்ளை பதில் அளித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in