கொலை சதி வழக்கு: துபாயில் இருக்கும் பிரபல நடிகையிடம் விசாரணை

நடிகர் திலீப்
நடிகர் திலீப்

விசாரணை அதிகாரியை கொல்ல சதிசெய்ததாக நடிகர் திலீப் மீது தொடரப்பட்ட வழக்கில் தற்போது துபாயில் இருக்கும் நடிகையிடம் ஆன்லைனில் விசாரணை நடத்த போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

பிரபல மலையாள நடிகை ஒருவர் கடந்த 2017-ம் ஆண்டு கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு, நடந்து வருகிறது. நடிகை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டபோது செல்போனில் பதிவு செய்யப்பட்ட காட்சிகள் நடிகர் திலீப்பிடம் இருப்பதாகவும், அதை அவர் பார்த்தது தனக்குத் தெரியும் என்று இயக்குநர் பாலச்சந்திரகுமார் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் விசாரணை அதிகாரியான டிஎஸ்பி பைஜு பவுலோசை, லாரி ஏற்றி கொல்ல திலீப், அவரது தம்பி அனூப், உறவினர் சூரஜ் சதி திட்டம் தீட்டியதாகவும் பாலச்சந்திரகுமார் தெரிவித்திருந்தார்.

நடிகர் திலீப்
நடிகர் திலீப்

இதையடுத்து அவர்கள் 4 பேர் மீதும் போலீஸார் ஜாமீனில் வர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் நடிகர் திலீப்பிடம் போலீஸார் விரைவில் விசாரணை நடத்தினர். அவரிடம் இருந்த போன்களும் கைப்பற்றப்பட்டு தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டன. இந்நிலையில் அவர் போனில் இருந்து 12 பேர்களுடன் நடத்தப்பட்ட `சாட்'கள் அழிக்கப்பட்டிருப்பது தடயவியல் சோதனையில் தெரியவந்துள்ளன.

நடிகர் திலீப்
நடிகர் திலீப்

தற்போது துபாயில் இருக்கும் பிரபல நடிகை, ஷார்ஜா கிரிக்கெட் சங்க நிர்வாகியும் தொழிலதிபருமான ஜாபர் உட்பட 12 பேரிடம் அந்த சாட் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், அந்த 12 பேரிடமும் விசாரணை நடத்தி, அதில் என்ன பேசப்பட்டது என்பதை அறிய போலீஸார் திட்டமிட்டுள்ளனர். முன்னதாக இந்த வழக்கில் சீரியல் நடிகர்கள் 2 பேர் விசாரிக்கப்பட்டனர்.

துபாயில் இருக்கும் நடிகையிடமும் ஜாபர் உள்ளிட்டவர்களிடமும் ஆன்லைன் மூலமாக விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in