`ராக்கெட்ரி' படத்துக்காக வீட்டை இழந்தேனா?- மாதவன் விளக்கம்

`ராக்கெட்ரி' படத்துக்காக வீட்டை இழந்தேனா?- மாதவன் விளக்கம்

`ராக்கெட்ரி' படத்திற்கு பைனான்ஸ் செய்ததால் தன்னுடைய வீட்டை இழந்தார் என்று வெளியான செய்திக்கு நடிகர் மாதவன் விளக்கம் அளித்துள்ளார்.

இந்திய விண்வெளி விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ‘ராக்கெட்ரி’ என்ற திரைப்படம் எடுக்கப்பட்டது. இந்த படத்தை நடிகர் மாதவன் நடித்து இயக்கினார். வசூல் ரீதியாக மட்டுமின்றி விமர்சன ரீதியாகவும் இப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த வெற்றியை நம்பி நாராயணன் குடும்பத்தாருடன் நடிகர் மாதவன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். நம்பி நாராயணன் அவருடைய மனைவிக்கு கேக் கூட்டி விடும் புகைப்படத்தை நடிகர் மாதவன் பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில், ராக்கெட்ரி படத்தைப் பற்றி சமூக வலைதளத்தில் ஒருவர், ராக்கெட்ரி படத்திற்கு பைனான்ஸ் செய்ததால் மாதவன் தன்னுடைய வீட்டை இழந்தார் என்றும் அதே சமயம் அவரது மகன் வேதாந்த் நாட்டிற்காக நீச்சலில் பதக்கங்களைப் பெறுகிறார் என்றும் என்றும் கூறியிருந்தார். இந்தப் பதிவை வேறொருவர் மாதவனுக்கு டேக் செய்திருந்தார்.

இதற்கு பதில் அளித்துள்ள மாதவன், "என் தியாகத்திற்கு தயவு செய்து அதிகமாக ஆதரவளிக்காதீர்கள். நான் எனது வீட்டையோ வேறு எதையுமோ இழக்கவில்லை. உண்மையில் ராக்கெட் சம்பந்தப்பட்டவர்கள் இந்ததாண்டு அதிகமான வருமான வரியைப் பெருமையுடன் செலுத்த உள்ளார்கள். கடவுளின் அருளால், நாங்கள் அனைவருமே மிகச் சிறப்பான மற்றும் பெருமையான லாபத்தை ஈட்டியுள்ளோம். நான் இன்னும் எனது வீட்டில்தான் நேசத்துடன் வசிக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in