நடிகர் திலீப் முன்ஜாமீன் மனு: பிப்ரவரி 7-ல் தீர்ப்பு

நடிகர் திலீப்
நடிகர் திலீப்

விசாரணை அதிகாரிகளைக் கொல்ல சதி திட்டம் தீட்டியதாகத் தொடரப்பட்ட வழக்கில், நடிகர் திலீப்பின் முன்ஜாமீன் மனு மீது வரும் திங்கட்கிழமை கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.

நடிகை கடத்தல் விவகாரத்தில், விசாரணை அதிகாரியை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாகத் நடிகர் திலீப், அவர் சகோதரர் அனூப் உட்பட 6 பேர் மீது புதிதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி, கேரள உயர் நீதிமன்றத்தில் நடிகர் திலீப் உட்பட 6 பேரும் மனு தாக்கல் செய்திருந்தனர்.

நடிகர் திலீப்
நடிகர் திலீப்

இந்நிலையில், நடிகர் திலீப் உட்பட குற்றம் சாட்டப்பட்டவர்களின் செல்போன்களை நீதிமன்ற பதிவாளரிடம் சமர்ப்பிக்கவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி நடிகர் திலீப்பின் 3 செல்போன்கள், அவர் சகோதரர் அனூப்பின் 2 செல்போன்கள், சகோதரி கணவர் சுராஜின் ஒரு போன் ஆகிய 6 செல்போன்கள் சீலிடப்பட்ட உறையில் வைத்து சமர்ப்பிக்கப்பட்டன.

இந்த வழக்கில் திலீப்புக்கு முன்ஜாமீன் வழங்க அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், வரும் திங்கட்கிழமை (பிப்.7) இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்படும் என கேரள உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in