மலைக்கவைத்த மலையாள ரசிகர்கள்: கொண்டாடித் தீர்த்த ‘கோப்ரா' படக்குழு

மலைக்கவைத்த மலையாள ரசிகர்கள்: கொண்டாடித் தீர்த்த ‘கோப்ரா' படக்குழு

விரைவில் வெளிவரவிருக்கும் 'கோப்ரா' படத்தினை ரசிகர்களிடம் அறிமுகப்படுத்தி, பிரபலப்படுத்துவதற்காக சீயான் விக்ரம் தலைமையிலான படக்குழுவினர் பல்வேறு நகரங்களுக்குப் பயணம் மேற்கொண்டிருக்கிறார்கள். இதன் ஒரு பகுதியாகக் கேரள மாநிலம் கொச்சிக்குச் சென்ற நடிகர் விக்ரம் மற்றும் படகுழுவுக்குப் பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் தயாரிப்பாளர் எஸ்.எஸ்.லலித்குமார் தயாரிப்பில், இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடித்து வெளியாகவிருக்கும் திரைப்படம் 'கோப்ரா'. ஆகஸ்ட் 31-ம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவிருக்கும் 'கோப்ரா' திரைப்படத்தை, தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

கணிதப் புதிர்களை மையப்படுத்தி உருவாகி இருக்கும் 'கோப்ரா' திரைப்படத்தைப் பற்றி ரசிகர்களிடத்தில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் நடிகர் விக்ரம் தலைமையில் படக் குழுவினர் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்கள். திருச்சி, மதுரை, கோவை, சென்னை ஆகிய இடங்களில் ரசிகர்களைச் சந்தித்த ’ ‘கோப்ரா’ படக்குழுவினர், கேரள தேசத்து ரசிகர்களைச் சந்திக்கும் வகையில் கொச்சிக்குப் பயணம் செய்தனர். கொச்சி விமான நிலையத்தில் படக்குழுவினருக்கு ஏராளமான ரசிகர்கள் திரண்டு உற்சாகமான வரவேற்பளித்தனர்.

இதனைத் தொடர்ந்து, படக்குழுவினர் கேரள பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். இந்தச் சந்திப்பில் நடிகர்கள் விக்ரம், ரோஷன் மேத்யூ, நடிகைகள் மியா ஜார்ஜ், மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி ஆகியோர் கலந்துகொண்டனர். பின்னர் கொச்சியில் உள்ள பிரபலமான ஜெயின் கல்லூரி வளாகத்தில் மாணவ மாணவிகளை 'கோப்ரா' பட குழுவினர் சந்தித்தனர். அவர்களின் கேள்விகளுக்கு படக்குழுவினர் பதிலளித்து உற்சாகப்படுத்தினர்.

தமிழகப் பயணத்தில் கிடைத்த வரவேற்பைப் போல், கேரள பயணத்திலும் கூடுதலான வரவேற்பைப் பெற்றதால் 'கோப்ரா' படக் குழு உற்சாகமடைந்திருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in