
விஜய் மக்கள் இயக்க நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் உடல் நலக்குறைபாடு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை நடிகர் விஜய் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்
தளபதி விஜய் மக்கள் இயக்க மாநிலப்பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த நவம்பர் 1-ம் தேதி மாலை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் 'லியோ' படத்தின் சக்ஸஸ் மீட் நடைபெற்றது.
அதில் அதிகமான ரசிகர்களை அரங்குக்கு வரவழைப்பது, அவர்களைப் பத்திரமாக நிகழ்ச்சி முடிந்தவுடன் வீட்டிற்கு பார்த்து அனுப்பி வைப்பது உள்ளிட்டப் பல்வேறு ஒருங்கிணைப்புப் பணிகளை தளபதி விஜய் மக்கள் இயக்க மாநிலப்பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் செய்தார். இதனால் ஏற்பட்ட அயற்சி மற்றும் சோர்வின் காரணமாக புஸ்ஸி ஆனந்த் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்த தகவல் அறிந்த நடிகர் விஜய் அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து மருத்துவமனைக்கு நேரில் சந்தித்து அவரை நலம் விசாரித்தார். அங்கிருந்த மருத்துவர்களிடம் புஸ்ஸி ஆனந்த் உடல் நலம் மற்றும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து நடிகர் விஜய் கேட்டறிந்தாக தகவல் வெளியாகியுள்ளது.