ஆஸ்கர் விருது ஆவணப்பட தம்பதி; தமிழக முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்!

முதல்வருடன் பொம்மன் - பெள்ளி தம்பதி
முதல்வருடன் பொம்மன் - பெள்ளி தம்பதி

ஆஸ்கர் விருது பெற்ற ஆவண குறும்படத்தின் முதுமலை தம்பதி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இந்த வருடம் இந்தியாவை சேர்ந்த 2 படைப்புகளுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. முதலாவது, அதிகம் அறியப்பட்ட ’ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தின் ’நாட்டு நாட்டு’ பாடல். இரண்டாவது ’தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்’ என்ற ஆவண குறும்படம்.

தாய் யானையை பிரிந்து காயங்களுடன் திரிந்த குட்டி யானை ஒன்று வனத்துறையின் பராமரிப்புக்கு வந்தபோது, யானை பராமரிப்பாளார்களான பொம்மன் - பெள்ளி தம்பதியர் அதனை அரவணைத்து வளர்க்கின்றனர். பழங்குடியினத்தை சேர்ந்த இந்த தம்பதிக்கும், குட்டி யானைக்கும் இடையிலான உணர்வுபூர்வமான ஆவணப்பதிவே, ’தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்’ என்ற ஆவண குறும்படம்.

உதகை ஆவணப்பட இயக்குநரான கார்த்திகி கான்சால்வ்ஸ் இதனை இயக்கியிருந்தார். குனீத்மோங்கோ தயாரித்திருந்தார். இருவரும் லாஸ் ஏஞ்செல்ஸ் சென்று, ஆண்டின் சிறந்த ஆவண குறும்படத்துக்கான விருதினை பெற்றனர்.

ஆவணப்படத்தில் யானையுடன் தோன்றிய பொம்மன் - பெள்ளி தம்பதிக்கு தமிழகத்தில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. அவற்றில் ஒன்றாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பொம்மன் - பெள்ளி தம்பதியினர் இன்று வாழ்த்து பெற்றனர். அவர்களுக்கு சால்வை அணிவித்து, வெகுமதி வழங்கி முதல்வர் பாராட்டு தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in