1.5 கோடி அபராதத்துக்கு தடை: நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி

1.5 கோடி அபராதத்துக்கு தடை: நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி

நடிகர் விஜய்க்கு வருமான வரித்துறை விதித்த 1.5 கோடி அபாரதத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

2016-17-ம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை நடிகை விஜய் தாக்கல் செய்தார். அப்போது, அந்த ஆண்டிற்கான வருமானமாக 35,42,91,890 ரூபாய் பெற்றதாக விஜய் தெரிவித்திருந்தார். அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டு நடவடிக்கையை மேற்கொண்ட வருமான வரித் துறையினர், நடிகர் விஜய் வீட்டில் கடந்த 2015-ம் ஆண்டு சோதனை நடத்தியது. இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் வருமான வரித்துறையினர் ஒப்பிட்டு பார்த்தனர். அதன்படி, புலி படத்திற்கு பெற்ற 15 கோடி ரூபாய் வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, வருமானத்தை மறைத்ததற்காக கடந்த ஜூன் 30-ம் தேதி நடிகர் விஜய்க்கு 1.5 கோடி அபராதம் விதித்தது வருமான வரித்துறை. இதை எதிர்த்து நடிகர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், அபராதம் விதிப்பதாக இருந்திருந்தால், 2019-ம் ஆண்டிலேயே உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும் என்றும், காலதாமதமாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வருமான வரித்துறை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த நீதிபதி, இது தொடர்பாக பதில் அளிக்க வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை செப்டம்பர் 16-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in