நடிகை நயன்தாராவின் 38-வது பிறந்த நாளான இன்று நடிக்கும் 81-வது படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நடிகை நயன்தாரா இன்று தனது 38-வது பிறந்த நாளைக் கொண்டாடினார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். நயன்தாராவின் கணவர் விக்னேஷ்சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாராவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிப்பில் உருவாகும் 81-வது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த 'எதிர்நீச்சல்', 'காக்கிச்சட்டை', தனுஷ் நடித்த 'கொடி' மற்றும் 'பட்டாஸ்' ஆகிய படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கும் இந்த படத்தில் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். நயன்தாராவின் 81-வது படமாக உருவாகவுள்ள இந்த படத்தை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.