பாடகியுடன் பிரபல இசை அமைப்பாளர் ரகசிய திருமணம்!

பாடகியுடன் பிரபல இசை அமைப்பாளர் ரகசிய திருமணம்!

பிரபல பின்னணி பாடகியுடன் இசை அமைப்பாளர் ரகசிய திருமணம் செய்துகொண்டார்.

தமிழில் 'யாருடா மகேஷ்', 'தோழா', 'பெங்களூர் நாட்கள்' உள்பட சில படங்களுக்கு இசை அமைத்திருப்பவர் மலையாள இசை அமைப்பாளர் கோபி சுந்தர். தெலுங்கு படங்களுக்கும் இசை அமைத்துள்ளார். இவர் நடிகர் ’அன்பு’ பாலாவின் முன்னாள் மனைவியும், பாடகியுமான அம்ருதா சுரேஷை காதலித்து வருவதாகக் கூறப்பட்டது.

ஏற்கெனவே பிரியா என்பவரை திருமணம் செய்த கோபி சுந்தர், 2010 -ம் ஆண்டு விவாகரத்து பெற்றார். பின் பாடகி அபயா ஹிரன்மயி என்பவருடன் வாழ்ந்து வந்தார். பின்னர் இருவரும் பிரிந்தனர். இதை அடுத்து அம்ருதாவை காதலித்து வந்தார். இருவரும் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளத்தில் அடிக்கடி பதிவிட்டு வந்தனர்.

ஆனால், தாங்கள் காதலிப்பதாகவோ, திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவோ எதுவும் சொல்லவில்லை. இந்நிலையில் நேற்று தனது 32-வது பிறந்த தினத்தைக் கொண்டாடிய அம்ருதா சுரேஷ், தனது சகோதரி மற்றும் கோபி சுந்தருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில், முதன்முறையாக கோபி சுந்தரை, கணவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனால் இவர்கள் இருவரும் ஏற்கனவே ரகசியமாக திருமணம் செய்துகொண்டதாகவும் அதை இப்போதுதான் அறிவித்துள்ளதாகவும் மலையாள திரையுலகினர் கூறி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in