இந்தி நடிகர் அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி அறுவை சிகிச்சை மேற்கொண்டதாக வெளியான தகவல் வதந்தி என்று தெரியவந்துள்ளது.
இந்தி நடிகர் அமிதாப் பச்சன், மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டதாகவும், அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் பரவியது. இதையடுத்து அமிதாப்பச்சன் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கோயில்களில் சிறப்பு பிராத்தனைகளில் ஈடுபட்டனர். இந்நிலையில், ஐஎஸ்பிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் அபிஷேக்பச்சனின் மும்பை அணியும், கரீனா கபூரின் கொல்கத்தா அணியும் இன்று மோதின.
இந்த போட்டியை பார்ப்பதற்காக அபிஷேக்பச்சனுடன் அமிதாப்பச்சன் மைதானத்திற்கு நேரில் வந்தார். இது அவரது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதன் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது, அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்று வெளியான செய்தி வதந்தி என்று உறுதியாகியுள்ளது.
சமீபத்தில் அபிஷேக்பச்சனை விட்டு ஐஸ்வர்யா விவாகரத்து செய்துவிட்டார் என்று வதந்தி பரவியது. இதை அந்த ஜோடி, தனியார் நிகழ்ச்சியில் நேரடியாக கலந்துக் கொண்டு அது வதந்தி என்று முற்றுப்புள்ளி வைத்தனர். இதுபோல, அமிதாப்பச்சன் குடும்பத்திற்கு எதிராக அதிக வதந்தி பரப்பப்படுவதாக கவலை தெரிவித்துள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
அமலுக்கு வந்தது தேர்தல் விதிமுறைகள்.. இனி இதையெல்லாம் செய்யக்கூடாது!
செல்லூர் ராஜூ செம தாக்கு... தமிழ்நாட்டுல இருக்கிற ஒரே அரைவேக்காடு அண்ணாமலை தான்!
குட் நியூஸ்... அரசு உதவிபெறும் பள்ளி மாணவிகளுக்கும் மாதம் ரூ.1,000!
இரட்டை இலை சின்னம் எங்களுக்கு வேண்டும்... தலைமை தேர்தல் ஆணையருக்கு ஓபிஎஸ் கடிதம்!
பெண்ணைக் கேலி செய்த வாலிபர் கோடாரியால் வெட்டிக் கொலை.. தாபாவில் பயங்கரம்!