நிர்வாண புகைப்படத்தில் இருப்பது நானா?: பல்டி அடித்த பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்

நிர்வாண புகைப்படத்தில் இருப்பது நானா?: பல்டி அடித்த பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்

நிர்வாண புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியான விவகாரத்தில், பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் விளக்கம் அளித்துள்ளார். அதில், தனது புகைப்படம் நிர்வாணமாக இருப்பது போல் மார்பிங் செய்யபட்டுள்ளதாக ரன்வீர் கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கின் நிர்வாண போட்டோ ஷூட் படங்களை ஜூலை 21-ம் தேதியன்று அவரது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். பாப் கலாச்சாரத்தின் அடையாளமும் நடிகருமான பர்ட் ரெனால்ட்ஸ்க்கு இந்த புகைப்படங்களைச் சமர்ப்பிப்பதாக ரன்வீர் தெரிவித்திருந்தார். ரன்வீர் சிங்கின் இந்த புகைப்படங்கள் அவரது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற அதே சமயம், இன்னொரு பக்கம் சர்ச்சையையும், விவாதங்களையும் கிளப்பியது.

இவரது புகைப்படங்கள் பெண்களின் உணர்வுகளைப் புண்படுத்தியதாகக் கூறி, ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் அதிகாரி செம்பூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதையடுத்து ஜூலை 26-ம் தேதி ரன்வீர் சிங் மீது முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டது. இது போன்ற நிர்வாண புகைப்படங்களைப் பகிர்ந்ததற்காக நடிகர் ரன்வீர் சிங் காவல் நிலையத்தில் ஆஜராகி நேரில் விளக்கம் கொடுக்க வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டது.

இதனை ஏற்று ஆக.29-ம் தேதியன்று செம்பூர் காவல் நிலையத்தில் நடிகர் ரன்வீர் சிங் ஆஜராகி விளக்கம் அளித்தார். இதுபோல நிர்வாண புகைப்படங்கள் எடுத்ததன் நோக்கம் என்ன என்பது குறித்து அவரிடம் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கும் மேல் விசாரணை நடத்தப்பட்டது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ரன்வீர், தன்னுடைய அரை நிர்வாண போட்டோஷூட்களை சமூக வலைதளங்களில் பகிரும் போது இந்த அளவிற்கு விவாதம் கிளம்பும் என எதிர்ப்பார்க்கவில்லை என கூறியுள்ளார். ரன்வீரின் இந்த வாக்குமூலத்தைப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நிர்வாண புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியானா விவகாரத்தில், தனது போட்டோ மார்பிங் செய்யப்பட்டுள்ளதாக பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் திடீர் என தற்போது விளக்கம் அளித்து அதிர்ச்சியளித்துள்ளார்.

அதில், அந்த புகைப்படத்தை வெளியிடவில்லை. தனது புகைப்படம் நிர்வாணமாக இருப்பது போல் மார்பிங் செய்யப்பட்டுள்ளதாக ரன்வீர் சிங் கூறியதாக செம்பூர் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in