’அவரே இசைதான்’: சித் ஸ்ரீராமை புகழும் அல்லு அர்ஜுன்

சித் ஸ்ரீராம்
சித் ஸ்ரீராம்

“அவருக்கு இசை தேவையில்லை, அவரே இசைதான்” என்று பாடகர் சித் ஸ்ரீராமை நடிகர் அல்லு அர்ஜுன் பாராட்டியுள்ளார்..

நடிகர் அல்லு அர்ஜுன் நடித்து சமீபத்தில் வெளியான படம், ’புஷ்பா’. தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியான இந்தத் திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்துள்ளார். பகத் பாசில், சுனில், தனஞ்செயா, அஜய் கோஷ், ராவ் ரமேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். சுகுமார் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்துள்ளார். நடிகை சமந்தா 'ஊ சொல்றியா மாமா' என்ற பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார்.

அல்லு அர்ஜுன்
அல்லு அர்ஜுன்

இந்தப் படத்தின் பாடல்கள் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன. இதில் இடம்பெற்றிருந்த 'ஸ்ரீவள்ளி' என்ற பாடலைப் பிரபல பாடகர் சித் ஸ்ரீராம் பாடியிருந்தார். இந்தப் பாடல், தமிழ், தெலுங்கு, இந்தியிலும் சூப்பர் ஹிட்டாகி இருக்கிறது. இந்நிலையில், நடிகர் அல்லு அர்ஜுன் அந்தப் பாடலை பாடிய சித் ஸ்ரீராமை பாராட்டியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘‘சகோதரர் சித் ஸ்ரீராம், 'ஸ்ரீவள்ளி' பாடலை, புஷ்பா படத்தின் நிகழ்ச்சியில் பின்னணி இசை இல்லாமல் பாடினார். பின்னணியில் இசைக்கருவிகள் மெதுவாக வாசிக்கப்படும் என்று காத்திருந்தேன். ஆனால் இசைக்கப்படவில்லை.

அவர் இசை இல்லாமல் பாடிக்கொண்டே இருந்தார். அவர் பாடியதைக் கேட்டதும் அடித்துச் செல்வதுபோல் உணர்ந்தேன். அவர் குரல் ஒரு மாயம் போல என்னுள் ஒலித்துக்கொண்டே இருந்தது. அவருக்கு இசை தேவையில்லை, அவரே இசைதான்” என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in