இயக்குநர் எஸ்.ஜி.சார்லஸ் இயக்கும் புதிய படத்தில் கதையின் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறாார். இதன் படப்பிடிப்பு சர்வதேச மகளிர் தினமான நேற்று சென்னையில் எளிய முறையில் துவங்கியது.
'கோடம்பாக்கத்தின் டஸ்கி பியூட்டி' என அழைக்கப்படும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது வித்தியாசமான கதைக்களம் கொண்ட புதிய படத்தில் நடிக்கிறார். நகைச்சுவை, சண்டைக் காட்சிகள் நிறைந்த பெயரிடப்படாத இப்படத்தில் கதை நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.
இப்படத்தை ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் மற்றும் ஹம்சினி என்டர்டெய்ன்மென்ட் பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இதில் ஐஸ்வர்யா ராஜேசுடன், லட்சுமி பிரியா, சுனில் ரெட்டி, கருணாகரன், மைம் கோபி, தீபா ஷங்கர், கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பாலமுருகன் ஒளிப்பதிவு செய்ய, கலை இயக்கத்தை ரவி கவனிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் சர்வதேச மகளிர் தினமான நேற்று எளிய முறையில் பூஜையுடன் துவங்கியது.