மும்பையில் ’பொன்னியின் செல்வன்’ ஷூட்டிங்

ஐஸ்வர்யா ராய், கார்த்தி பங்கேற்பு
மும்பையில் ’பொன்னியின் செல்வன்’ ஷூட்டிங்

மும்பையில் நடக்கும் ’பொன்னியின் செல்வன்’ ஷூட்டிங்கில் ஐஸ்வர்யா ராய், கார்த்தி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

கல்கியின் புகழ்பெற்ற ’பொன்னியின் செல்வன்’ நாவலை படமாக இயக்கி வருகிறார் மணிரத்னம். பிரமாண்டமாக உருவாகும் இந்தப் படத்தில், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், ஜெயராம், பார்த்திபன், பிரபு உட்பட பலர் நடித்துள்ளனர். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார்.

ஐஸ்வர்யா ராய்
ஐஸ்வர்யா ராய்

தாய்லாந்து, பாண்டிச்சேரி, ஐதராபாத் உள்பட பல்வேறு பகுதிகளில் இதன் ஷூட்டிங் நடந்துள்ளது. இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாகிறது. முதல் பாகம் இந்த ஆண்டு செப்டம்பர் 30 அன்று வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

படத்தின் பெரும்பாலான காட்சிகளின் ஷூட்டிங் முடிவடைந்துவிட்ட நிலையில், சில காட்சிகள் பாக்கி இருப்பதகாக் கூறப்படுகிறது. இதற்காக மணிரத்னம் உள்ளிட்ட படக்குழுவினர் மும்பை சென்றுள்ளனர். அங்கு, ஐஸ்வர்யா ராய், கார்த்தி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in