ஆதித்த கரிகாலனான விக்ரம் - குந்தவையான த்ரிஷா: ட்விட்டரில் மாறியது பெயர்!

ஆதித்த கரிகாலனான விக்ரம் - குந்தவையான த்ரிஷா: ட்விட்டரில் மாறியது பெயர்!

‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்துள்ள விக்ரம், த்ரிஷா ஆகியோர் ட்விட்டரில் தங்கள் பெயரை மாற்றியுள்ளனர்.

‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் ஆதித்த கரிகாலன் வேடத்தில் விக்ரம், குந்தவை வேடத்தில் த்ரிஷா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் தொடர்பாக விக்ரம் அவ்வப்போது சுவாரஸ்யமான ட்வீட்களை பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் விக்ரம் தற்போது தனது ட்விட்டர் கணக்கின் பெயரை ‘ஆதித்த கரிகாலன்’ என மாற்றியுள்ளார். த்ரிஷாவும் ட்விட்டரில் ‘குந்தவை’ ஆக மாறியுள்ளார். ரசிகர்கள் இந்த விஷயத்தை கொண்டாடி வருகின்றனர்.

இம்மாத இறுதியில் வெளியாகவுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் குறித்த அப்டேட்கள் தினமும் வரிசைகட்டி வந்து பரபரபூட்டுகின்றன. இது தொடர்பாக விக்ரம் நேற்று வெளியிட்ட ட்வீட்டில், “சரி. தஞ்சைக்கு வருகிறேன். எட்டு திக்கும் புலிக்கொடி நாட்டும் திரைப்பயணம் தொடங்கும் முன் பெருவுடையாரின் ஆசி வேண்டுமல்லவா?குந்தவை, உடன் வருகிறாயா? வந்தியத்தேவன் வருவான்.என்ன நண்பா,வருவாய் தானே?அப்படியே அந்த அருண்மொழியையும் இழுத்து வா!” என தெரிவித்துள்ளார்.

சோழப் பேரரசர் ராஜராஜசோழனின் வாழ்க்கை வரலாற்றினை கற்பனையுடன் கலந்து பொன்னியின் செல்வன் நாவலாக கல்கி படைத்திருந்தார். இதனை தற்போது மணிரத்னம் திரைப்படமாக எடுத்துள்ளார். இப்படத்தில் வந்தியத்தேவனாக கார்த்தி, அருண்மொழி வர்மனாக ஜெயம்ரவி, குந்தவையாக த்ரிஷா, நந்தினியாக ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நடித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in