`பொன்னியின் செல்வன்’ படத்திற்குப் பிறகு சம்பளத்தை உயர்த்தும் த்ரிஷா!

`பொன்னியின் செல்வன்’ படத்திற்குப் பிறகு சம்பளத்தை உயர்த்தும் த்ரிஷா!

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகை த்ரிஷா தனது சம்பளத்தை உயர்த்திடத் திட்டமிட்டுள்ளார்.

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ‘ஜெயம்’ ரவி உள்ளிட்டப் பலரது நடிப்பில் வெளியாகி ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வெற்றிப் பெற்றது. முதல் பாகத்திலேயே 500 கோடிக்கும் அதிகமான வசூலை உலகம் முழுவதும் இந்தத் திரைப்படம் பெற்றிருக்கிறது.

இதில் குந்தவை கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷா நடித்திருந்தார். படத்தின் புரோமோஷன்களில் ஆரம்பித்து இந்தப் படத்தில் இவரது நடிப்பு, உடை என ‘பொன்னியின் செல்வன்’ பட சமயத்தில் இணையம் முழுக்கவே த்ரிஷா ஆக்கிரமித்து இருந்தார்.

’விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘96’, ஆகிய படங்களுக்குப் பிறகு ‘பொன்னியின் செல்வன்’ குந்தவை கதாபாத்திரம் த்ரிஷாவின் பயணத்தில் சிறப்பாக அமைந்த ஒன்றாகப் பலரும் தங்களது கருத்துகளைத் தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில், ’பொன்னியின் செல்வன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்து ஒப்பந்தமாக இருக்கும் படங்களில் தன்னுடைய சம்பளத்தை நடிகை த்ரிஷா உயர்த்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நடிகை த்ரிஷா இதுவரை தான் நடித்து வந்தப் படங்களுக்கு சுமார் 1.5 கோடி ரூபாய் சம்பளம் பேசியதாகவும் இனி அது 3 கோடியாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது.

’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் இந்த மாதம் நான்காம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in