`நீ நடிகை தானே என்று பாலியல் ரீதியாக அத்துமீறுகிறார் மாமனார்'- காவல்நிலையத்தில் துணை நடிகை புகார்!

`நீ நடிகை தானே என்று பாலியல் ரீதியாக அத்துமீறுகிறார் மாமனார்'- காவல்நிலையத்தில் துணை நடிகை புகார்!

சென்னை, மாங்காடு அருகே கெருகம்பாக்கம் பாலகிருஷ்ணன் நகர் பகுதியை வசித்து வருபவர் பிரபல துணை நடிகை காஞ்சனா (பெயர் மாற்றம்). இவர் சினிமாவில் துணை நடிகையாகவும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்னர் இவருக்கு சுரேஷ்குமார் என்பவருடன் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன.

இந்நிலையில் பாலியல் புகார் ஒன்றிற்காகச் செய்தியாளர்களைச் சந்தித்த காஞ்சனா, "நான் நடிகையாக இருப்பதால் என் மாமனார் சரவணவேல், மாமியார் சாந்தி ஆகியோர் என்னை மதிப்பதில்லை. ‘நீ நடிகை தானே’ என என் மாமனார் பலமுறை பாலியல் ரீதியாக அத்துமீற முயன்றுள்ளார். இது குறித்துக் காவல் துறையினரிடம் பல முறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுத்ததில்லை, என் மாமியாரின் நெருங்கிய உறவினர் காவல்துறையில் மிக உயரிய பதவியில் இருப்பது தான் இதற்குக் காரணம். சில தினங்களுக்கு முன்பு கூட என் மாமனார் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். அதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்ததால் பெரிய கட்டையைக் கொண்டு என்னைத் தாக்கினார். இதனால் பலத்த காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றேன். இது குறித்து மாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தும் என் மாமனாரை விசாரிக்க அவர்கள் மறுக்கிறார்கள்” என்கிறார்.

தலைமறைவாக இருக்கும் மாமனாரைக் கைது செய்து தனக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என அந்த துணை நடிகை கோரிக்கை விடுத்துள்ளார். இதனிடையே காஞ்சனாவை அவரது மாமனார் சரவணவேல் தாக்கும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இதையடுத்து மாங்காடு காவல் நிலையத்தில் காஞ்சனாவின் புகார் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள நிலையில், சரவணவேல், சாந்தி ஆகியோர் தலைமறைவாகியுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in