
எனக்கு இப்போது நல்ல நேரம் நடக்கிறது என நடிகை ராஷ்மிகா மந்தனா உற்சாகமாகக் கூறியுள்ளார்.
அல்லு அர்ஜூனுடன் ‘புஷ்பா2’ திரைப்படம், ரன்பீருடன் பாலிவுட்டில் ‘அனிமல்’, ஹீரோயின் சென்ட்ரிக் படமான ‘ரெயின்போ’ என ’இன்னும் இரண்டு வருடங்களுக்கு என்கிட்ட கால்ஷீட் கேட்காதீங்கப்பா’ என பயங்கர பிஸியாக நடித்து வருகிறார் ராஷ்மிகா.
இந்த நிலையில், சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் ‘நாம் சாப்பிடும் ஒவ்வொரு அரிசியிலும் நமது பெயர் எழுதியிருக்கும் என்று சொல்லுவார்கள்.என்னைக் கேட்டால் நடிகர், நடிகைகள் நடிக்கும் கதாபாத்திரம் கூட அவர்களின் பெயர் எழுதியிருந்தால் தான் அந்த கதாபாத்திரம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
ஒவ்வொருவருக்கும் ஒரு நல்ல நேரம் இருக்கும். இப்போது எனக்கு நல்ல நேரம் நடக்கிறது. இத்தனை படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன் என்ற ஆனந்தத்தை விட நல்ல நல்ல கதைகளில் நடிக்கிறேன் என்பது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது” என உற்சாகமாக பேசியுள்ளார். ‘நேஷனல் கிரஷ்’ஷின் இந்தப் பேச்சுக்கு ரசிகர்களும் மகிழ்ச்சியைப் பகிர்ந்து வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
பரபரப்பு... முதல்வர் வீட்டின் மீது கல்வீச்சு!
வைரல் வீடியோ: நடுரோட்டில் டூவீலரில் காதலர்கள் சில்மிஷம்!
ஒரு நாள் பிரிட்டன் தூதரான சென்னை இளம்பெண்! குவியும் வாழ்த்துகள்!
உஷார்... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
அடி தூள்... பொன்னியின் செல்வனாக கலக்கும் அஜித்! ரசிகர்கள் கொண்டாட்டம்!