செல்ல நாய்க்கும் விமான டிக்கெட் கேட்டாரா?: ராஷ்மிகா பதில்

செல்ல நாய்க்கும் விமான டிக்கெட் கேட்டாரா?: ராஷ்மிகா பதில்

தன்னோடு தன் செல்ல நாய்க்கும் விமான டிக்கெட் வேண்டும் என தயாரிப்பாளர்களிடம் கேட்டதாக வந்த செய்திக்கு நடிகை ராஷ்மிகா பதில் அளித்துள்ளார்.

நடிகை ராஷ்மிகா மந்தனா, தமிழ், இந்தி, தெலுங்கு என பிசியாக நடித்து வருகிறார். படப்பிடிப்புக்காக மும்பை, ஹைதராபாத், சென்னை என அடிக்கடி விமானத்தில் பறந்து வருகிறார். தனது செல்ல நாயான ஆரா (AURA) மீது அதிக பாசம் கொண்ட ராஷ்மிகா, வீட்டில் இருக்கும்போது அதனுடன் விளையாடிக் கொண்டிருப்பார். அது தொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளப்பக்கத்தில் அவர் இதற்கு முன் பகிர்ந்திருக்கிறார்.

இந்நிலையில், படப்பிடிப்புக்கு வரும்போது தனது செல்ல நாய்க்குட்டி ஆரா(AURA) வுக்கும் விமான டிக்கெட் வேண்டும் என்று தயாரிப்பாளர்களிடம் அவர் கேட்பதாக செய்திகள் வெளியாயின. இந்தச் செய்தி வேகமாகப் பரவியது. இதை ஒரு இணையதளத்தில் கண்ட நடிகை ராஷ்மிகா எரிச்சல் அடைந்தார். அந்த செய்தியை டேக் செய்துள்ள அவர், அதை மறுத்துள்ளார்.

“நீங்களே என் ’ஆரா’வை என்னுடன் பயணிக்க சொன்னாலும் அது வராது. அது ஹைதராபாத் என் வீட்டில் சந்தோஷமாக இருக்கிறது. உங்கள் அக்கறைக்கு நன்றி. இந்த நாள் உங்களால் மகிழ்ச்சியான நாளாக மாறியது. சிரிப்பை அடக்க முடியவில்லை’ என தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in