குழந்தைகளோடு கார் விபத்தில் சிக்கிய நடிகை ரம்பா: பலத்த காயங்களுடன் இளைய மகள் சிகிச்சை!

குழந்தைகளோடு கார் விபத்தில் சிக்கிய நடிகை ரம்பா: பலத்த காயங்களுடன் இளைய மகள் சிகிச்சை!

நடிகை ரம்பாவின் கார் விபத்துக்குள்ளானதில்,  அவரும் குழந்தைகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி இருக்கிறார்கள். அவரின் இளைய மகள் சாஷா காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை ரம்பா. `உள்ளத்தை அள்ளித்தா' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆன ரம்பா, அருணாசலம், காதலா காதலா, நினைத்தேன் வந்தாய் உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். 2019-ம் ஆண்டு தொழிலதிபர் ஒருவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். கனடாவில் வசித்து வரும் அவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில்  பள்ளியில் படிக்கும் தனது குழந்தைகளை ரம்பா காரில் அழைத்து வந்துள்ளார். அப்போது எதிரே வந்த காரின் மீது ரம்பாவின் கார் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் அவரும் மூத்த மகளும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்கள். இளைய மகள் சாஷா காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ரம்பா தனது ட்விட்டர் பக்கத்தில்,  ‘பள்ளியிலிருந்து குழந்தைகளை அழைத்து வரும்போது நடந்த கார் விபத்தில் குழந்தைகளுடன் நான் உயிர் தப்பினேன். 

நாங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறோம்.  நானும் என் மூத்த மகளும் சிறு காயங்களுடன் சிகிச்சை பெற்று மீண்டு வந்துள்ளோம். இளைய மகள் சாஷா இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்’’ எனத் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in