பணம் கொடுத்து பப்ளிசிட்டி... பிரியாமணி பகிர்ந்த தகவல்!

நடிகை பிரியாமணி
நடிகை பிரியாமணி

சினிமாத்துறையில் பிரபலமாக வேண்டும் என்பதையும் தாண்டி பணத்தை இறைத்து வேறு சில விஷயங்களும் செய்ய வேண்டும் என்பதைக் கேள்விப்பட்டபோது ஆச்சரியமாக இருந்தது என நடிகை பிரியாமணி கூறியுள்ளார்.

நடிகை பிரியாமணி
நடிகை பிரியாமணி

தமிழில் ‘கண்களால் கைது செய்’ படம் மூலம் அறிமுகமான பிரியாமணிக்கு ‘பருத்திவீரன்’ படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதன் பிறகு பல படங்களில் நடித்த பிரியாமணி தற்போது பாலிவுட்டில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் இவர் ‘ஃபேமிலிமேன்’ வெப் சீரிஸிலும், அட்லி இயக்கத்தில் ‘ஜவான்’ படத்திலும் நடித்திருந்தார். இந்த நிலையில், தான் கேள்விப்பட்ட விஷயம் ஒன்றை ஆச்சரியமாகப் பகிர்ந்துள்ளார் பிரியாமணி.

நடிகை பிரியாமணி
நடிகை பிரியாமணி

”பாலிவுட் நடிகர், நடிகைகள் ஏர்போர்ட், ஷூட்டிங் ஸ்பாட், ஜிம் என அவர்கள் போகும் இடங்களில் எல்லாம் புகைப்படங்கள், வீடியோக்கள் டிரெண்டாகிறது. ஆனால், என்னை ஏன் அப்படி யாரும் எடுப்பதில்லை என என் நண்பர் ஒருவரிடம் கேட்டேன். அப்போதுதான் அவர் ‘பப்பராஸி’ புகைப்படக் கலைஞர்கள் பற்றி என்னிடம் கூறினார்.

அதாவது, பாலிவுட்டில் உள்ள சில நடிகைகள், தாங்கள் செல்லும் இடங்கள் குறித்து குறிப்பிட்ட ஏஜென்சிகளிடம் முன்னதாகவே சொல்லி விடுவார்கள். அவர்கள் சொன்ன தகவல்படி அந்த ஏஜென்சி, தங்களது புகைப்பட கலைஞர்களை அந்த இடங்களுக்கு அனுப்பி புகைப்படம், வீடியோ எடுத்து இணையத்தில் வைரலாக்கி விடுவார்கள். இதனை எதேச்சையாக எடுத்தது போலவும் குறிப்பிடுவார்கள்.

இதற்கு குறிப்பிட்ட அந்த நடிகர்கள் பணமும் கொடுக்கிறார்கள். இது சரி, தவறு என்று நான் சொல்லவில்லை. ஆனால், இந்தத் தகவல் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. என்னிடம் கேட்டபோது, நான் மறுத்துவிட்டேன்” என்று சொல்லி இருக்கிறார் பிரியாமணி.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in