நடிகை பார்வதி நாயர் பரபரப்பு புகார்: முன்னாள் ஊழியர் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு

நடிகை பார்வதி நாயர் பரபரப்பு புகார்: முன்னாள் ஊழியர் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு

நடிகை பார்வதி நாயரின் புகைப்படத்தை வெளியிட்டு மிரட்டியதாக முன்னாள் ஊழியர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரபல நடிகை பார்வதி நாயர் கடந்த அக்டோபர் மாதம், தனது வீட்டில் பணிபுரிந்த சுபாஷ் சந்திரபோஸ் என்பவர் பல லட்சம் மதிப்புள்ள கைகடிகாரம், லேப்டாப், கேமிரா, செல்போன் ஆகியவற்றைத் திருடி சென்றதாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து போலீஸார், சுபாஷ் சந்திரபோஸ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தன் மீது பொய் புகார் சுமத்துவதாக சுபாஷ் சந்திரபோஸ் பார்வதி நாயர் மீது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் நடிகை பார்வதி நாயர் காவல் ஆணையர் அலுவலகத்தில் சுபாஷ் சந்திரபோஸ் மீது மீண்டும் புகார் அளித்தார். அதில் தொடர்ச்சியாக சுபாஷ் சந்திரபோஸ் தனது புகைப்படத்தை வெளியிட்டும், செல்போனில் தொடர்பு கொண்டும் மிரட்டல் விடுத்து வருவதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில், சுபாஷ் சந்திரபோஸ் மீது மீண்டும் நுங்கம்பாக்கம் போலீஸார் மிரட்டல், தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பெண்களை இழிவுபடுத்துதல், இழிவுபடுத்தும் புகைப்படங்களை வெளியிடுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in