மலையாள நடிகரை, பிரபல நடிகை நித்யா மேனன் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்து வருபவர் நித்யா மேனன். பெங்களூருவைச் சேர்ந்த இவர் தமிழில், காஞ்சனா 2, ஓ காதல் கண்மணி, 24, இருமுகன், மெர்சல், சைக்கோ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இப்போது தனுஷுடன் ’திருச்சிற்றம்பலம்’ படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது.
மலையாளத்தில் அவர் நடித்துள்ள ’ஆறாம் திருகல்பனா’ படத்தின் ஷூட்டிங்கும் முடிந்துவிட்டது. இதையடுத்து அவர் புதிய படங்களில் ஒப்பந்தமாகவில்லை. இதனால் அவர் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
நடிகை நித்யா மேனன், பிரபல மலையாள ஹீரோ ஒருவரைக் காதலித்து வருவதாகவும் இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இதுபற்றி நித்யா மேனன் அதிகாரப்பூர்வமாக ஏதும் தெரிவிக்கவில்லை.