சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன் ஜோடி, தேனிலவுக்கு வெளிநாடு சென்றுள்ளனர்.
கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்த நடிகை நயன் தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில், கடந்த 9-ம் தேதி திருமணம் செய்துகொண்டனர். ரஜினிகாந்த், இந்தி நடிகர் ஷாருக் கான், இயக்குநர்கள் மணிரத்னம், தயாரிப்பாளர் போனி கபூர் உட்பட திரையுலகினர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
திருமணம் முடிந்த மறுநாளே திருப்பதிக்கு ஜோடியாக சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தனர். பின்னர் உடல்நிலை சரியில்லாததால், திருமணத்திற்கு வராத தனது அம்மாவிடம் ஆசிவாங்க கேரளா சென்றனர். அங்கு சில நாட்கள் தங்கி இருந்தனர்.
இந்நிலையில் இருவரும் இப்போது ஹனிமூனுக்கு தாய்லாந்து சென்றுள்ளனர்.அங்குள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதைக் கண்ட ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கானுடன் நடித்து வரும் ’ஜவான்’ படப்பிடிப்பில் அடுத்த வாரம் நயன்தாரா கலந்துகொள்ள இருக்கிறார்.