
பாலிவுட் நடிகை, நடனக்கலைஞரான மாதுரி தீக்ஷித் அரசியலில் குதிக்க இருப்பதாகவும் அவர் போட்டியிடும் தொகுதி குறித்தும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர்களும் நடிகைகளும் சினிமா டூ அரசியல் என்ற விஷயத்தை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அந்த வகையில் பாலிவுட் நடிகை மாதுரி தீக்ஷித் அரசியல் களத்தில் நுழைய இருப்பதாக கடந்த சில நாட்களாகவே தகவல் பரவி வந்தது. குறிப்பாக, வருகிற லோக் சபா தேர்தலில் மும்பையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து அவர் போடியிடப் போவதாகவும் சொல்லப்பட்டது. மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த இந்தியா vs நியூசிலாந்து அரையிறுதிப் போட்டியில் மாதுரியும் அவரது கணவர் ஸ்ரீராம் நேனேயும் மாநில பாஜக தலைவர் ஆஷிஷ் ஷெலருடன் கலந்துகொண்டனர். இந்த விஷயமும் மாதுரியின் அரசியல் வருகையை உறுதி செய்யும் விதமாக இருந்தது.
அரசியலில் மாதுரி நுழைய இருப்பது குறித்து அவர் பெயர் அடிபடுவது இது முதல் முறையல்ல. கடந்த லோக்சபா தேர்தலிலும் அவர் பெயர் அடிபட்டது. இது குறித்து மாதுரி தனது சமீபத்திய நேர்காணலில் தெளிவுபடுத்தியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது, “நான் அரசியலில் நுழைய இருக்கிறேன் எனத் தகவல் வந்து கொண்டிருப்பது குறித்து நான் அறிவேன். ஆனால், அவை எல்லாம் வெறும் வதந்திதான். நான் எந்தக் கட்சியிலும் இணைந்து தேர்தலில் போட்டியிடப் போவதில்லை” எனக் கூறியுள்ளார் மாதுரி.
இதையும் வாசிக்கலாமே...
HBD Geminiganesan|தமிழ் சினிமாவின் காதல் மன்னன்... ‘ஜெமினி கணேசன்’ பிறந்தநாள் ஸ்பெஷல்!
HBD Roja|ஆந்திர அரசியலின் பீனிக்ஸ் பறவை நடிகை ரோஜா பிறந்தநாள் ஸ்பெஷல்!
இன்று வங்கக்கடலில் உருவாகிறது 'மிதிலி' புயல்... வானிலை மையம் எச்சரிக்கை!
அதிர்ச்சி அறிவிப்பு: டெல்லி செல்லும் தென்மாவட்ட ரயில்கள் முழுமையாக ரத்து!
அதிர்ச்சி: பயிற்சியின் போது மாரடைப்பால் 30 வயது விமானி உயிரிழப்பு!