லாரி மீது கார் மோதிய விபத்தில் பிரபல நடிகை கிஷோரி ஷஹானே அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
பிரபல மராத்தி நடிகை கிஷோரி ஷஹானே. இந்தி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வரும் இவர், இந்தி திரைப்பட இயக்குநர் தீபக் பல்ராஜின் மனைவி. இவர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக மும்பையில் இருந்து குடும்பத்தினருடன் காரில் சென்று கொண்டிருந்தார்.
புனே மாவட்டம், பாவ்னா ஏரி அருகே, கார் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் திடீரென மோதியது. இதில் அவரும் அவர் குடும்பத்தினரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கார் பலத்த சேதமடைந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதை இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ள நடிகை கிஷோரி ஷஹானே, அந்த புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். ’கார் விபத்தில் சிக்கியது. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினோம்’ என்று தெரிவித்துள்ளார்.