'நடிக்கும் போது நான் சிவாஜி'!: நடிகை ஜானகி சுரேஷ் பேட்டி

நடிகை ஜானகி சுரேஷ்
நடிகை ஜானகி சுரேஷ்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ‘கிழக்கு வாசல்’. இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் இதில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வெங்கட் கதாநாயகனாகவும், ரேஷ்மா கதாநாயகியாகவும் நடிக்கிறார். இதில் எஸ்ஏசியின் ஜோடியாக நடிகை ஜானகி சுரேஷ் நடித்து வருகிறார்.

இவர் பெரிய திரையில் ’டைனோசர்ஸ்’, ‘வலிமை’ போன்ற படங்களிலும் ‘நவம்பர் ஸ்டோரி’ என்ற வெப் சீரிஸிலும் நடித்திருக்கிறார். இப்போது ‘கிழக்கு வாசல்’ சீரியல் மூலமாக சின்னத்திரைக்குள் அடியெடுத்து வைத்திருப்பவரிடம் பேசினோம்.

சினிமாவில் கலக்கி கொண்டிருந்தவர் இப்போது சீரியலிலும் நடிக்க வந்தது ஏன்?

நடிகை ஜானகி சுரேஷ்
நடிகை ஜானகி சுரேஷ்

நான் எடுத்த முடிவுதான் இது. சீரியலில் நடிப்பதற்காக நான் வாய்ப்புத் தேடிக் கொண்டிருந்தேன். அப்படி இருக்கும்போது அதுவாக எனக்குக் கிடைத்த வாய்ப்புதான் இந்த ‘கிழக்கு வாசல்’.

முதலில் என் கதாபாத்திரத்தில் இன்னொருவர் நடிப்பதாக இருந்தது. அதன் பிறகு, பலருக்கும் கைமாறிதான் இந்த வாய்ப்புக் கிடைத்தது. இப்போது சினிமாவைப் போலவே சீரியல் நட்சத்திரங்களுக்கும் நிறைய ரசிகர்கள் உள்ளனர். சீரியலுக்கு நல்ல ரீச் உள்ளது. வெளியே போகும்போது, முன்பை விட என்னை பலரும் அடையாளம் கண்டு கொள்கின்றனர். இது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.

நீங்கள் நடிக்க வந்ததே ஆக்சிடென்ட்தான் எனக் கேள்விப்பட்டோம்...உண்மையா?

நடிகை ஜானகி சுரேஷ்
நடிகை ஜானகி சுரேஷ்

சென்னையில் நான் நடிக்க வருவதற்கு முன்பு அபுதாபியில் இருந்தேன். அங்கே சின்ன வேலைப் பார்த்துக் கொண்டு குழந்தைகள், குடும்பத்தை கவனித்துக் கொண்டிருந்தேன். பின்பு நாங்கள் சென்னை வர வேண்டிய சூழல்.

அப்போது ஒரு நாடகம் பார்த்து நடிப்புக் கற்றுக் கொள்ளலாம் என்ற எண்ணம் வந்தது. அப்படியே வாய்ப்புகள் வந்தது. என் வீட்டில் சொல்லும் போது அம்மா, கணவர், பிள்ளைகள் எல்லாருக்கும் ஆச்சரியம்தான். முதலில் ‘நீ சமாளிப்பியா?’ எனக் கேட்டார்கள்.

நான் நம்பிக்கையோடு இருந்ததைப் பார்த்து, அவர்களும் சரி என்றார்கள். முதல் வாய்ப்பு இயக்குநர் பாலாவின் ‘நாச்சியார்’ படத்தில் கிடைத்தது. நான் நடிக்க வந்ததே 40+ வயதில்தான். அந்த சமயத்தில் சரண்யா மேம், ராதிகா மேம் என ஒருசிலர் தான் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தார்கள். அதனால், நான் உள்ளே வந்தபோது அதுபோன்ற வாய்ப்புகள் அதிகம் வந்தது.

பாலா போன்ற பெரிய இயக்குநர் படத்திலேயே முதல் வாய்ப்பு என்றதும் பயம் இருந்ததா?

நடிகை ஜானகி சுரேஷ்
நடிகை ஜானகி சுரேஷ்

உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் சின்ன பயம் இருக்கதான் செய்தது. ஆனால், அதுபோன்ற பயம் இருந்தால், நடிப்புக்கு வேலைக்கு ஆகாது இல்லையா? அதனால், அந்த பயத்தை எல்லாம் தூக்கிப் போட்டு விட்டேன். அதிகபட்சம் என்ன சொல்லப் போகிறார்கள்? ’உனக்கு நடிப்பு வரவில்லை, கெளம்புமா’ என்றுதான் சொல்வார்கள்.

அதனால், நமக்கு முன்னால் யார் இருந்தாலும் எதுவும் நினைக்கக்கூடாது! நாமதான் சிவாஜி என நினைத்துக் கொண்டு நடிப்பேன். கொஞ்சம் ஓவர்தான். ஆனால், முதல் முறை இப்படித்தான் என்னைத் தேற்றிக் கொண்டேன்.

சீரியலிலும் உங்கள் அறிமுகம் மூத்த இயக்குநரோடுதான். எஸ்ஏசியுடன் நடித்த அனுபவம் பற்றிச் சொல்லுங்கள்?

’கிழக்கு வாசல்’ சீரியல்...
’கிழக்கு வாசல்’ சீரியல்...

எஸ்ஏசி சார் பெரிய இயக்குநர், விஜயுடைய அப்பா என்ற பயமெல்லாம் இருந்தது. அவரும் அமைதியான நபர்தான். ஆனால், செட்டுக்குள் போன கொஞ்ச நாளிலேயே எங்களுடன் நன்றாகப் பழக ஆரம்பித்து விட்டார். அவர் கொடுத்த அந்த கம்ஃபோர்ட்டால்தான் நாங்கள் இன்னும் கூலாக நடிக்க ஆரம்பித்தோம்.

அவர் அடிக்கடி என்னிடம், ‘அம்மா, நானும் உங்களைப் போல சீரியலுக்குப் புதிதுதான்!’ என்பார். அதனால், அவர் எங்களிடம் சில காட்சிகள் எல்லாம் இப்படி செய்யலாம் எனவும் ஐடியாவும் கொடுப்பார்.

இந்த சீரியலில் எஸ்ஏசி பேசும் பல வசனங்கள் விஜய்க்காகதான் என இணையத்தில் ரசிகர்கள் சொல்லி வருகிறார்கள். அதுபற்றி ஏதும் சொல்வாரா?

குடும்பத்துடன் எஸ்.ஏ.சந்திரசேகர்
குடும்பத்துடன் எஸ்.ஏ.சந்திரசேகர்

எனக்கு அப்படித் தெரியவில்லையே! நீங்கள் கேட்பது மாதிரியான விஷயங்கள் நான் எதுவும் கேள்விப்படவும் இல்லை. அப்பா- மகன் காட்சிகள் ஒருவேளை ரசிகர்கள் தொடர்பு படுத்தி இருக்கலாம். ஆனால், அவர் அதுபற்றி எதுவும் எங்களுடன் சொன்னதில்லை. அவர் எப்போதும் சின்சியரான ஒரு கலைஞர். தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் சரியாக செய்ய வேண்டும் என நினைப்பார்.

உங்களுக்கு கிடைத்த மறக்க முடியாத பாராட்டு?

கெளதம் மேனனுடன் நடிகை ஜானகி சுரேஷ்
கெளதம் மேனனுடன் நடிகை ஜானகி சுரேஷ்

நிறைய இருக்கிறது. ‘இந்தியன்2’ படத்தில் நடித்திருக்கிறேன். அதில் எனக்கான சில காட்சிகள் எடுத்தார்கள். அதில் எனக்கு வசனங்கள் கிடையாது. முகத்தில் மட்டுமே எக்ஸ்பிரஷன் கொடுக்க வேண்டும். என்னுடைய நடிப்பைப் பார்த்துவிட்டு இயக்குநர் ஷங்கர் பாராட்டினார். அதேபோல, ‘குயின்’ வெப்சீரிஸிலும் என் நடிப்பை கெளதம் மேனன் பாராட்டியது மறக்க முடியாதது.

இதையும் வாசிக்கலாமே...

பிரதமர் விழாவில் சர்ச்சையை கிளப்பிய முதல்வர்... கொந்தளிக்கும் பாஜக!

அடம்பிடிக்கும் காங்கிரஸ்... கறார் காட்டும் திமுக... கூட்டணியில் திடீர் சிக்கல்!

இன்சூரன்ஸ் பணத்துக்காக நண்பன் கொலை... 3 மாதம் கழித்து கொலையாளி கைது!

அரசியலிலும் அவர் கேப்டன்... விஜயகாந்துக்கு பிரதமர் மோடி புகழாரம்!

13 வயதில் நடந்த பாலியல் தொல்லை... மனம் திறந்த யாஷிகா ஆனந்த்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in