`என் கண்முன்னே அவர்கள் அறையில் நெருக்கமாக இருந்தனர்'- சின்னத்திரை நடிகை திவ்யா கண்ணீர்

`என் கண்முன்னே அவர்கள் அறையில் நெருக்கமாக இருந்தனர்'- சின்னத்திரை நடிகை திவ்யா கண்ணீர்

கர்ப்பிணியான தன்னை தாக்கிய கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சின்னத்திரை நடிகை திவ்யா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சின்னத்திரை நடிகை திவ்யா(35). செல்லமா, கேளடிகண்மணி உள்ளிட்ட பல்வேறு தொடர்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் கர்ப்பிணியான தன்னை அடித்து உதைத்த கணவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி நேற்று இரவு நடிகை திவ்யா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளளார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை திவ்யா, "தனக்கு 2012-ம் ஆண்டு திருமணம் நடைபெற்று 6 வயதில் ஒரு குழந்தை உள்ளது. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தபோது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கேளடி கண்மணி தொடரில் கதாநாயகியாக நடித்து கொண்டிருந்த நேரத்தில் அதே தொடரில் கதாநாயகனாக நடித்த அர்ணவ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. பின்னர் இருவரும் திருவேற்காடு பகுதியில் வீடு எடுத்து இருவரும் ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் திருமணம் செய்து கொள்வது என முடிவு செய்தோம்.

அர்ணவ் கட்டயாப்படுத்தியதால் இந்துவாக இருந்த நான் இஸ்லாம் மதத்திற்கு மாறி கடந்த ஜூலை மாதம் அர்ணவ்வை திருமணம் செய்து கொண்டேன். அப்போது திருமணமான புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டாம் என அர்ணாவ் தன்னிடம் கட்டாயப்படுத்தினார். மூன்று மாதத்திற்கு முன்பு நான் கர்ப்பமடைந்த போது, இந்த விஷயத்தை யாரிடமும் சொல்ல வேண்டாம் என அர்ணவ் என்னை கட்டாயப்படுத்தியதால் யாரிடமும் இதை சொல்லவில்லை. சமீபத்தில் செல்லம்மா தொடரில் கதாநாயகியாக நடித்த அன்ஷிதா என்பவருடன் அர்ணவ் நெருக்கமாக பழகி வருவதாக எனக்கு தகவல் வந்தது. இது குறித்து கேட்டபோது அர்ணவ் தொடர்ந்து பிரச்சினை செய்து வந்தார். இதனால் மனமுடைந்த நான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிட்டேன். இதை பார்த்து ஆத்திரமடைந்த அர்ணவ் உடனடியாக வீடியோவை டெலிட் செய்ய சொல்லி வற்புறுத்தியதுடன் அர்ணவ் அந்த வீடியோ விளம்பரத்திற்காக எடுக்கப்பட்டது என பதிவிட்டதை பார்த்து அதிர்ச்சியடைந்தேன்.

மேலும் ஷூட்டிங் ஸ்பார்ட்டுக்கு நேரடியாக சென்று பார்த்தபோது அர்ணவ், அன்ஷிதா இருவரும் தனியாக அறையில் நெருக்கமாக இருந்தனர். இதை தட்டிக்கேட்டதற்கு தண்ணீர் பாட்டிலை தூக்கி வீசி, அனைவரின் முன்னிலையிலேயே குழந்தை வயிற்றிலேயே செத்துப்போக வேண்டும் என சாபமிட்டார். கணவர் அர்ணவ் தனியாக வீடு எடுத்து அன்ஷிதாவுடன் தங்கி வருகிறார். தனது முன்னிலையிலேயே செல்போனில் அன்ஷிதாவுக்கு அர்ணவ் ஐ லவ் யூ என சொல்லி முத்தம் கொடுக்கிறார்.

அன்ஷிதாவை திருமணம் செய்து கொள்ளபோவதாக வந்த தகவல் குறித்து கேட்டப்போது, அர்ணவ் கர்ப்பிணியான தன்னை வயிற்றில் எட்டி உதைத்து தாக்கியதில் மயக்கமடைந்து விட்டேன். பின்னர் நண்பர்கள் மூலமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றேன். கொஞ்சம் தாமதமாகி இருந்தால் குழந்தை இறந்திருக்கக்கூடும். இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறேன். அர்ணவ்வுடன் சேர்ந்து வாழ ஆசைப்படுகிறேன். ஆனால் சேர்ந்து வாழ்வதற்கான அத்தனை வழிகளையும் அவர் அடைத்து விட்டார். தனது வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் அனைத்தையும் அர்ணவ் பிளாக் செய்து விட்டார்" என்று கண்ணீர் மல்க கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in