நடிகை கடத்தல் வழக்கு: காவ்யா மாதவனுக்கு மீண்டும் நோட்டீஸ்!

நடிகை கடத்தல் வழக்கு: காவ்யா மாதவனுக்கு மீண்டும் நோட்டீஸ்!

நடிகை கடத்தல் வழக்கில் பிரபல நடிகை காவ்யா மாதவனுக்கு போலீஸார் மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

கேரளாவில் கடந்த 2017-ம் ஆண்டு பிரபல நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நடிகர் திலீப் உட்பட 7 பேர் மீது வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கில் திலீப்பின் மனைவி நடிகை காவ்யா மாதவனுக்கும் தொடர்பு உள்ளது என்பதை உறுதிப்படுத்தும் ஆடியோ வெளியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால் அவரிடமும் விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்து, ஏப்ரல் 11-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு கடந்த மாதம் நோட்டீஸ் அனுப்பினர். தான் சென்னையில் இருப்பதால் அன்று ஆஜராக முடியாது என்றும் 13-ம் தேதி தன் வீட்டில் வைத்து விசாரணை நடத்தலாம் என்றும் குற்றப்பிரிவு போலீஸாருக்கு தகவல் அனுப்பி இருந்தார்.

அந்த வீட்டில் ஆடியோ, வீடியோ கிளிப், சாட்சிகளின் அறிக்கைகள் உள்பட பலவற்றை புராஜக்டரில் காட்டி விசாரணை நடத்த வேண்டும் என்பதால், அதற்கான வசதி இல்லை என்று கூறி விசாரணை நடத்தப்படவில்லை.

இந்நிலையில் விசாரணைக்கு இன்று ஆஜராக வேண்டும் என்று காவ்யா மாதவனுக்கு குற்றப்பிரிவு போலீஸார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதன்படி அவருடைய ஆலுவா வீட்டில் வைத்து விசாரணை நடைபெறும் என்று தெரிகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in