பிரபல நடிகைக்கு பெண் குழந்தை பிறந்ததை அடுத்து திரையுலகினரும் ரசிகர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
பிரபல மலையாள நடிகை அஞ்சலி நாயர். தமிழில் இவர், நெல்லு, கோட்டி, இதுவும் கடந்து போகும், அகடு, அண்ணாத்த, மாமனிதன் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். 125 படங்களுக்கு மேல் நடித்துள்ள அஞ்சலி நாயர், கடந்த 2011-ம் ஆண்டு அனீஸ் உபசனாவை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்துவிட்டு தனியாக குழந்தையுடன் வாழ்ந்து வந்தார்.
பின்னர், இணை இயக்குநரான அஜித் ராஜூவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அஞ்சலி நாயருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. தனது சமூக வலைதளப்பக்கத்தில் குழந்தை மற்றும் அஜித் ராஜூவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள அஞ்சலி நாயர், ‘எங்கள் புதிய குடும்ப உறுப்பினர். இனிமையான பெண் குழந்தையை போலவே, வாழ்க்கையும் அற்புதங்கள் நிறைந்தது. உங்கள் அனைவரின் ஆசியும் தேவை’’ என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ரசிகர்களும் திரையுலகினரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.