தன்னம்பிக்கை இல்லாததால் தமிழில் பேசவில்லை: நடிகர் யஷ்

தன்னம்பிக்கை இல்லாததால் தமிழில் பேசவில்லை: நடிகர் யஷ்

``தன்னம்பிக்கை இல்லாததால், கே.ஜி.எப் படத்தில் தமிழில் டப்பிங் பேசவில்லை'' என்று நடிகர் யஷ் தெரிவித்தார்.

ஹோம்பாலே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் தயாரித்திருக்கும் படம் 'கே ஜி எஃப் சாப்டர் 2’. வரும் 14-ம் தேதி இந்த படம் வெளியாகிறது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர். பிரபு வெளியிடுகிறார். பிரசாந்த் நீல் இயக்கியுள்ள இந்தப் படத்தின் நாயகனாக யஷ் நடிக்க, அவர் ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கிறார்.

பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். புவன் கௌடா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ரவி பஸுரூர் இசை அமைத்துள்ளார்.

பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழு
பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழு

இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. இதில் நடிகர் யஷ் பேசும்போது, ``மூன்று ஆண்டுகளுக்கு முன் என் நண்பர் விஷால் மூலம் கேஜிஎப் படத்தின் முதல் பாகத்தை வெளியிட்டோம். இப்போது 2-ம் பாகத்தை வெளியிடுகிறோம். தமிழ்நாட்டில் இருக்கும் திரைப்பட தொழில்நுட்ப கலைஞர்கள் கடும் உழைப்பாளிகள். சண்டைப் பயிற்சி இயக்குநர் அன்பறிவு இதற்கு சிறந்த உதாரணம். அவருடைய கடின உழைப்பிற்கு, படத்தின் முதல் பாகத்தில் பணியாற்றியதற்காக தேசிய விருது கிடைத்தது.

கேஜிஎப்பைப் பொருத்தவரை ஒவ்வொரு மொழிக்குரிய முக்கியத்துவத்தை அளித்திருக்கிறோம். ஏனெனில் மொழி என்பது மதிப்புமிக்கது, அதற்குரிய மரியாதை தரவேண்டும். ஒட்டு மொத்த படக்குழுவினரும் அதற்கான மரியாதையை வழங்கியிருக்கிறோம். சேகர் என்ற கலைஞர் எனக்காக தமிழில் பின்னணி பேசி இருக்கிறார் அவருக்கு நன்றி. முதல் பாகத்திலேயே நான் தமிழில் பின்னணி பேச முயற்சித்தேன். ஆனால் தன்னம்பிக்கை இல்லாததால் பேசவில்லை. இனி வரும் படங்களில் தமிழில் பின்னணி பேச முயற்சிக்கிறேன்'' என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in