'ரோலக்ஸா' ரீட்டர்ன்ஸ்... சூர்யா கொடுத்த செம அப்டேட்!

நடிகர் சூர்யா
நடிகர் சூர்யா
Updated on
1 min read

நடிகர் சூர்யா தனது ரசிகர்களை நேரில் சந்தித்து அவர்களுடன் உரையாடி மகிழ்ந்துள்ளார். மேலும், அவர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த தனது அடுத்தடுத்த படங்களின் அப்டேட்டுகளையும் கொடுத்துள்ளார்.

தற்போது தனது மகன், மகள் படிப்பிற்காக மும்பையில் உள்ள நடுகர் சூர்யா, சென்னை வந்திருந்த நிலையில், தனது ரசிகர்களை நேரில் சந்தித்து உரையாடியுள்ளார். சிறுத்தை சிவா இயக்கத்தில் தான் நடித்து வரும் 'கங்குவா' திரைப்படம் குறித்து பேசுகையில், ஷூட்டிங்கிற்கு முன் எதிர்பார்த்ததை விட 100 மடங்கு சிறப்பாக வந்துள்ளதாக தெரிவித்திருக்கிறார்.

அடுத்ததாக, தனது 43-வது படத்தின் படப்பிடிப்பு வருகிற அக்டோபர் மாதம் தொடங்கும் எனவும், இப்படத்தை சுதா கொங்கரா இயக்க உள்ளதாகவும் தெரிவித்து இருக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்க உள்ளது.

அதே போல, 'வாடிவாசல்' அப்டேட் குறித்து ரசிகர்கள் கேட்ட போது, வெற்றிமாறன் 'விடுதலை' இரண்டாம் பாகத்தின் ஷுட்டிங்கை முடித்த பின்னர் 'வாடிவாசல்' தொடங்கும் என கூறினார்.

மேலும், 'விக்ரம்' படத்தில் சூர்யா நடித்த ரோலெக்ஸ் என்கிற கேமியோ கதாபாத்திரத்தை மையமாக வைத்து தனி படம் ஒன்று உருவாக உள்ளதாகவும், இதற்காக லோகேஷ் சொன்ன கதை தனக்கு மிகவும் பிடித்திருந்ததாகவும் கூறி இருக்கிறார்.

ரோலேக்ஸ் படத்தை எடுத்து முடித்த பின்னர் 'இரும்புக்கை மாயாவி' படத்தை எடுக்க திட்டமிட்டு இருப்பதாகவும் ரசிகர்கள் சந்திப்பில் சூர்யா கூறி இருக்கிறார். 'ரோலக்ஸ்', 'இரும்புக்கை மாயாவி' என இரண்டில் எது முதலில் நடிக்க வேண்டும் என சூர்யா கேட்க ரசிகர்கள் 'ரோலக்ஸ்' என உற்சாகமாக சொல்ல அதற்கு சம்மதித்து இருக்கிறார் சூர்யா.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in