'எதற்கும் துணிந்தவன்' படத்தின் தெலுங்கு பதிப்புக்கும் நடிகர் சூர்யாவே டப்பிங் பேசி வருகிறார்.
சூர்யா நடித்துள்ள படம் ’எதற்கும் துணிந்தவன்’. பாண்டிராஜ் இயக்கி இருக்கும் இந்தப் படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் சூர்யா ஜோடியாக, பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், வினய், சூரி உட்பட பலர் நடித்துள்ளனர்.
டி.இமான் இசையில் பாடல்கள் வரவேற்பைப் பெற்றுள்ளன. ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் இந்தப் படம் வெளியாகிறது. இந்நிலையில் தெலுங்கிலும் நடிகர் சூர்யாவே டப்பிங் பேசியுள்ளார். இந்தத் தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. ஆக்ஷன், பேமிலி சென்டிமென்ட் படமான ’எதற்கும் துணிந்தவன்’ மார்ச் 10-ம் தேதி வெளியாகிறது.