அஜய் தேவ்கனுக்கும் எனக்கும் மோதலா?: நடிகர் சுதீப் விளக்கம்

அஜய் தேவ்கனுக்கும் எனக்கும் மோதலா?: நடிகர் சுதீப் விளக்கம்

``இந்தி நடிகர் அஜய் தேவ்கனுக்கும் தனக்கும் சண்டை ஏதுமில்லை'' என்று நடிகர் சுதீப் விளக்கம் அளித்தார்.

அனுப் பண்டாரி இயக்கத்தில் கிச்சா சுதீப், ஜாக்குலின் பெர்னாண்டஸ், நிரூப் பண்டாரி , நீதா அசோக் நடித்துள்ள படம், ‘விக்ராந்த் ரோணா’. ஃபேண்டஸி ஆக்‌ஷன் அட்வெஞ்சர் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படம், 3டி-யில் கன்னடம், இந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ளது. ஜூலை 28-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது.

அதில் பேசிய நடிகர் சுதீப், ’’நான் சினிமாவை நம்புகிறேன், சினிமாவைத் தான் காதலிக்கிறேன். அதுதான் எங்களை இங்கு வரை அழைத்து வந்துள்ளது. இது நல்ல படைப்பு. இந்தப் படத்தில் நானும் இருப்பது பெருமையாக உள்ளது. தமிழில், நல்ல வாய்ப்புகள் வரும்போது நடிப்பேன். இந்தப்படம் உங்கள் அனைவரையும் புது உலகிற்கு கூட்டிச்செல்லும்''என்றார். பின்னர் அவரிடம் இந்தி மொழி தொடர்பாக பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கானுடன் ட்விட்டரில் ஏற்பட்ட கருத்து மோதல் பற்றி கேட்கப்பட்டது.

சுதீப், ஷாம்
சுதீப், ஷாம்

அதற்குப் பதிலளித்த சுதீப். ``எனக்கும் அவருக்கும் சண்டை ஏதுமில்லை. அஜய் தேவ்கன், என் நண்பர்தான். என்னிடம் ஏதாவது கேட்க வேண்டும் என்று நினைத்தால் போனில் கேட்டிருக்கலாம். பொதுவெளியில் அவர் கேட்டதால் நானும் அதில் பதில் சொன்னேன். நான் அனைவருக்கும் மதிப்பு கொடுக்கக் கூடியவன். அஜய்தேவ்கனுக்குத் தவறான புரிதல் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதை உணர முடிந்தது. பிறகுதான், என் மொழியில் நான் ட்வீட் செய்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? என்று சொன்னேன். அவ்வளவுதான்'' என்று கூறினார்.

நடிகர் ஷாம், இயக்குநர் அனுப் பண்டாரி , தயாரிப்பாளர்கள் அலங்கார் பாண்டியன் , டி.ஜி.தியாகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in