`இதை நான் எதிர்ப்பார்க்கவில்லை'- நிர்வாணப் படம் தொடர்பாக போலீஸில் ரன்வீர் விளக்கம்!

`இதை நான் எதிர்ப்பார்க்கவில்லை'- நிர்வாணப் படம் தொடர்பாக போலீஸில் ரன்வீர் விளக்கம்!

தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் நிர்வாணப் படங்கள் வெளியிட்டது தொடர்பாக நடிகர் ரன்வீர் சிங் காவல் துறையில் விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் நிர்வாணமாக புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். பாப் கலாச்சாரத்தின் அடையாளமும் நடிகருமான பர்ட் ரெனால்ட்ஸ்க்கு இந்த புகைப்படங்களை சமர்ப்பிப்பதாக ரன்வீர் தெரிவித்திருந்தார். ரன்வீர் சிங்கின் இந்த புகைப்படங்கள் அவரது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற அதே சமயம், இன்னொரு பக்கம் சர்ச்சையையும் விவாதங்களையும் கிளப்பியது.

இதற்காக ரன்வீர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், இது போன்ற நிர்வாண புகைப்படங்களை பகிர்ந்ததற்காக நடிகர் ரன்வீர் சிங் காவல் நிலையத்தில் ஆஜராகி நேரில் விளக்கம் கொடுக்க வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டது.

இதனை ஏற்று நேற்று செம்பூர் காவல் நிலையத்தில் நடிகர் ரன்வீர் சிங் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். இதுபோல நிர்வாண புகைப்படங்கள் எடுத்ததன் நோக்கம் என்ன என்பது குறித்து அவரிடம் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கும் மேல் விசாரணை நடத்தப்பட்டது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள ரன்வீர், தன்னுடைய அரை நிர்வாண போட்டோஷூட்களை சமூக வலைதளங்களில் பகிரும் போது இந்த அளவிற்கு விவாதம் கிளம்பும் என எதிர்ப்பார்க்கவில்லை என கூறியுள்ளார். ரன்வீரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புகைப்படங்களை வெளியிட்டு விவாதங்கள் கிளம்பிய சமயத்தில், ’நான் ஆயிரம் பேருக்கு முன்னால் நிர்வாணமாக இருக்க தயங்க மாட்டேன். ஆனால், என் முன்னால் இருப்பவர்கள் அசெளகரியம் அடைகிறார்கள் என்பது தான் உண்மை’ என முன்பு ரன்வீர் விளக்கம் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in