மீண்டும் சீரியலுக்குள் நுழைந்திருக்கும் கார்த்திக்!

மீண்டும் சீரியலுக்குள் நுழைந்திருக்கும் கார்த்திக்!

நடிகர் கார்த்திக் ராஜ் மீண்டும் சீரியலில் நடிக்க வருகிறார்.

விஜய் டிவியின் ‘கனா காணும் காலங்கள்’, ‘ஆஃபிஸ்’ ஆகிய சீரியல்கள் மூலம் பிரபலமானவர் நடிகர் கார்த்திக் ராஜ். பிறகு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘செம்பருத்தி’ சீரியல் இவருக்கு நிறைய ரசிகர்களைக் கொண்டு வந்து சேர்த்தது. இந்த சீரியலில் கார்த்திக் ராஜ் மற்றும் ஷாபானா ஜோடி சின்னத்திரை பார்வையாளர்களால் ரசிக்கப்பட்டது. இந்த நிலையில், கார்த்திக் ராஜ் சினிமாவில் நடிக்க இருப்பதாகத் தெரிவித்து இந்த சீரியலில் இருந்து விலகினார். இவருக்குப் பதிலாக வேறொரு நடிகரும் அந்த கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

சொந்தத் தயாரிப்பில் கதாநாயகனாக அறிமுகமாக இருக்கும் தன்னுடையப் படத்தில் நடித்து வந்தார் கார்த்திக். இந்தப் படம் குறித்தான அப்டேட் விஷயங்களையும் அவ்வப்போது தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து வந்தார். இந்த நிலையில், கார்த்திக் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள ‘கார்த்திகை தீபம்’ என்ற புதிய தொடரில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். இந்த சீரியல் வருகிற ஐந்தாம் தேதி முதல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. கதாநாயகியாக ஹர்த்திகா நடிக்கிறார்.

‘செம்பருத்தி’ சீரியலுக்கு பிறகு மீண்டும் சின்னத்திரைக்குள் வந்திருக்கும் கார்த்திக் ராஜாவிற்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in