நடிகர் பிரக்யா நாக்ராவை திருமணம் செய்து கொண்டது போன்ற புகைப்படத்தை நடிகர் ஜெய் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளனர். இதைப் பார்த்துவிட்டு திடீர் திருமணமா என ரசிகர்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
நாற்பது வயதைக் கடந்தும் தமிழ் சினிமாவின் பேச்சுலர் ஹீரோவாக வலம் வருகிறார் நடிகர் ஜெய். ‘எப்போது திருமணம்?’ என்ற கேள்வி வந்தாலே சிரித்து மழுப்புபவர் இப்போது நடிகை பிரக்யா நாக்ராவுடன் திருமணம் முடிந்திருப்பது போன்ற புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இது ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
பஞ்சாபியைச் சேர்ந்த பிரக்யா நாக்ரா ‘வரலாறு முக்கியம்’, ‘என்4’ உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். இவர் கழுத்தில் புது தாலி அணிந்திருக்கும் பிரக்யா, அருகில் கையில் பாஸ்போர்ட்டுடன் ஜெய்யும் இருக்க ‘கடவுளின் ஆசியோடு புது வாழ்வு தொடங்கி இருக்கிறது!’ என புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருக்கிறார். .
ஜெய்யும் இந்தப் புகைப்படத்தை தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்திருக்கிறார். இதைப் பார்த்துவிட்டு ரசிகர்கள் இருவருக்கும் திடீர் திருமணம் ஆகிவிட்டதா என ஷாக் ஆகியுள்ளனர். இது நிஜத்தில் நடந்த திருமணமா அல்லது பட புரமோஷனா எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதற்கு முன்பு நடிகை அஞ்சலியுடன் கிசுகிசுக்கப்பட்டார் ஜெய். பின்பு, இருவரும் நண்பர்கள் தான் என அஞ்சலி விளக்கம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
தமிழக அரசு உஷார்... கேரளாவில் வேகமெடுக்கும் பறவைக் காய்ச்சல் பரவல்!
பழிக்குப்பழி... திருச்சியில் பிரபல ரவுடி முத்துக்குமார் பட்டப்பகலில் படுகொலை!
தூக்க கலக்கத்தில் பாறையில் மோதிய வேன் ஓட்டுநர்... 31 பேர் படுகாயம்!
வாக்கு எண்ணும் மையத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்ற வாலிபர்... சுற்றி வளைத்து கைது செய்த போலீஸார்!
கார் மீது சிலிண்டர் லாரி மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியான சோகம்!