திடீர் உடல் நலக்குறைவு: மருத்துவமனையில் டி.ராஜேந்தர் அனுமதி

திடீர் உடல் நலக்குறைவு: மருத்துவமனையில் டி.ராஜேந்தர் அனுமதி

பிரபல இயக்குநரும், சிம்புவின் தந்தையுமான டி.ராஜேந்தர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

1980-களில் முன்னணி இயக்குநராக இருந்தவர் டி.ராஜேந்தர். அப்போது இவர் இயக்கிய அனைத்து படங்களும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இயக்கம், ஒளிப்பதிவு, இசை உட்பட பல்வேறு துறைகளில் சாதனைப் படைத்தவர். இவர் மகன் சிம்பு இப்போது முன்னணி நடிகராக இருக்கிறார்.

டி.ராஜேந்தருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தொடர்ந்து அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேல் சிகிச்சைக்காக அவரை சிங்கப்பூர் அழைத்துச் செல்ல ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டி.ராஜேந்தர் விரைவில் நலம்பெற பிரார்த்திப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in