`கேப்டன் மில்லர்’ படத்திற்காக தனுஷ்- சிவராஜ்குமார் சண்டைக்காட்சிகள் படமாக்கம்!

`கேப்டன் மில்லர்’ படத்திற்காக தனுஷ்- சிவராஜ்குமார் சண்டைக்காட்சிகள் படமாக்கம்!

‘கேப்டன் மில்லர்’ படத்திற்காக தனுஷ்- சிவராஜ்குமார் இடையிலான சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட உள்ளது.

‘திருச்சிற்றம்பலம்’, ‘நானே வருவேன்’ படங்களுக்குப் பிறகு நடிகர் தனுஷின் ‘வாத்தி’ திரைப்படம் வருகிற டிசம்பர் மாதம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. வெங்கி அட்லூரி இயக்கும் இந்தப் படத்தில் தனுஷ் ஜோடியாக சம்யுக்தா நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு படத்தின் பூஜை நடந்த நிலையில் படப்பிடிப்புத் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. இதன் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு வருகிறது டிசம்பர் மாதம் முதல் தேதியில் தொடங்க இருக்கிறது. இந்தத் தேதியில் நடிகர்கள் தனுஷ் மற்றும் சிவராஜ்குமார் இடையிலான சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட உள்ளது.

பின்பு அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தில் படப்பிடிப்பு முடிவடைந்து அதன் பிறகு போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தொடங்க இருக்கிறது. 1940-களில் LTTE -யைப் பின்னணியாகக் கொண்டுப் படமாக்கப்பட்டு வருகிறது. ஜிவி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். பிரியங்கா அருள் மோகன், சந்தீப் கிஷன் ஆகியோர் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in