நடிகர் அருள்நிதியின் அடுத்த படம் 'கழுவேத்தி மூர்க்கன்'

நடிகர் அருள்நிதி
நடிகர் அருள்நிதிநடிகர் அருள்நிதியின் அடுத்த படம் 'கழுவேத்தி மூர்க்கன்'

நடிகர் அருள்நிதியின் அடுத்த படம் குறித்தான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகர் அருள்நிதி ’டைரி’ படத்தின் வெற்றியை அடுத்து தனது அடுத்த படம் குறித்து அறிவித்துள்ளார். சமீபத்தில் அவரது ‘டிமாண்டி காலனி 2’, ‘துணிவின் குரல்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து இப்போது புதிய படம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் வெளியான அவருடைய படங்கள் பாக்ஸ் ஆஃபீஸிலும் வெற்றியைக் கண்டதை அடுத்து இந்த வருடம் எதிர்ப்பார்ப்பில் இருக்கக்கூடிய இந்தப் படங்கள் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில், கவின் -அபர்ணாதாஸ் நடிப்பில் வெற்றியடைந்த 'டாடா' படத்தைத் தயாரித்த ஒலிம்பியா மூவிஸ் அம்பேத்குமார் தயாரிப்பில், 'ராட்சசி' படப்புகழ் சை.கெளதமராஜ் இயக்கத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்கும் புதிய படமான 'கழுவேத்தி மூர்க்கன்' அறிவிக்கப்பட்டுள்ளது.
'சார்பட்டா பரம்பரை', 'நட்சத்திரம் நகர்கிறது' போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்த துஷாரா விஜயன் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். வில்லேஜ்- ஆக்‌ஷன் படமாக உருவாகி வரும் இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றதோடு படம் குறித்தான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.

ராமநாதபுரம், சிவகங்கை, ராமேஸ்வரம், விருதுநகர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது. அருள்நிதி கதாநாயகனாக நடிக்க, துஷாரா விஜயன் படத்தின் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், சந்தோஷ் பிரதாப், சாயாதேவி, முனீஸ்காந்த், சரத்லோகிதாஸ்வா, ராஜசிம்மன், 'யார்' கண்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு இமான் இசையமைக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in