இயக்குநருடன் மோதல், நடிகருக்கு 2 ஆண்டு தடை!

இயக்குநருடன் மோதல், நடிகருக்கு 2 ஆண்டு தடை!

இயக்குநருடன் மோதலில் ஈடுபட்ட நடிகருக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பிரபல கன்னட நடிகர் அனிருத் ஜட்கர். பல கன்னட படங்களில் நடித்துள்ள இவர், தமிழில் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய ’முத்தம்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்போது டிவி தொடர்களில் நடித்து வருகிறார். இவர் ஆரூர் ஜெகதீஷ் இயக்கும் ‘ஜோதே ஜோதேயாலி’ என்ற டிவி தொடரில் நடித்து வந்தார்.

இயக்குநருக்கும் அனிருத்துக்கும் காட்சியை மாற்றி அமைப்பது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இது, ஒரு கட்டத்தில் மோதலாக மாறியது. இருவரும் சரமாரியாக திட்டிக் கொண்டனர். பின்னர் படப்பிடிப்பில் இருந்து அனிருத் வெளியேறிவிட்டார். அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து வைத்தனர். தொடர்ந்தும் மோதல் ஏற்பட்டதால் படப்பிடிப்பு தடைப்பட்டது.

இது தொடர்பாக சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது. விசாரித்த சங்கம், அனிருத் இதற்கு முன்பும் இது போன்று பிரச்சினை செய்திருப்பதால், தொடர்களில் நடிக்க 2 ஆண்டுகள் தடை விதித்து உத்தரவிடப்பட்டது. ‘ஜோதே ஜோதேயாலி’ தொடரில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார்.

இதுகுறித்து நடிகர் அனிருத் கூறும்போது, ’’சீன் பேப்பரை முன்பே கேட்டேன். அப்படிக் கொடுத்தால் வசனங்களை படித்து மனப்பாடம் செய்துவிட்டு பேச சரியாக இருக்கும் என்று சொன்னேன். இது குற்றமா? . நான் திமிரானவன் இல்லை. என் ரசிகர்களுக்கு அது தெரியும்’’ என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in