நடிகை ரோஜாவின் மகள் அன்ஷுமாலிகா திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே நடிகை ரோஜாவின் மகள் அன்ஷுமாலிகாவை நடிக்க வைக்க, சில டோலிவுட் இயக்குனர்கள் அணுகியதாக கூறப்பட்ட நிலையில், தன்னுடைய மகளை நடிகையாக்க ரோஜா - செல்வமணி ஆகியோர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அமைச்சராக உள்ள ரோஜா நேரம் கிடைக்கும் போதெல்லாம் தன்னுடைய மகளுக்கு சீக்ரட்டாக நடிப்பு பயிற்சியை கொடுத்து வருவதாகவும், அதே போல் அவரது தந்தை செல்வமணியும் திரைக்கதை எழுதுதல் மற்றும் படம் இயக்குவது குறித்து கற்பித்து வருகிறாராம்.
இந்நிலையில் அன்ஷுமாலிகா தற்போது, அமெரிக்காவில் உள்ள பிரபல திரைப்பட கல்லூரியில் நடிப்பு, இயக்கம், திரைக்கதை எழுதுதல், ஆகியவை பற்றி படித்து வருகிறார். படிப்பை முடித்து இந்தியா திரும்பிய பின்னர் அவர் நடிப்பில் கவனம் செலுத்துவார் என கூறப்படுகிறது.
ஏற்கனவே அன்ஷுமாலிகா எழுதிய 'தி ஃப்ளேம் இன் மை ஹார்ட்', என்கிற புத்தகம் 'ஜி டவுன்’ என்ற இதழில் வெளியானது. இந்த புத்தகத்திற்காக சமீபத்தில் தென்னிந்தியாவின் சிறந்த எழுத்தாளருக்கான விருதை இவர் வென்றார்.